வாழ்விக்க வந்த வள்ளுவம் ! கவிஞர் இரா .இரவி !

வாழ்விக்க வந்த வள்ளுவம் !  கவிஞர் இரா .இரவி !

கலங்கரை விளக்கமாக வழிகாட்டும் வள்ளுவம் !
கலங்கி நிற்கையில் திசை காட்டும் வள்ளுவம் !

மனச்சோர்வு நீக்கி தன்னம்பிக்கைத் தரும்  வள்ளுவம் !
மனிதநெறி மனிதனுக்குக் கற்பிக்கும்  வள்ளுவம் !

வாழ்க்கைப் படகை செலுத்தத் துடுப்பாகும் வள்ளுவம் !
வாழ்வின் அர்த்தம் உணர்த்திடும் வள்ளுவம் !

ஒப்பற்ற உயர்ந்த இனிய இலக்கியம் வள்ளுவம் !
ஒழுக்கத்தை உயிருக்கு மேலாக இயம்பிய வள்ளுவம் !

மனஇருளை  நீக்கி அறிவு ஒளி தரும் வள்ளுவம் !
மனக்கவலை போக்கும் மருந்தாகும்  வள்ளுவம் !

மனிதனை சிறந்த மனிதனாக்கும் வள்ளுவம் !
மனிதநேயம் மனதிற்குப் பயிற்றுவிக்கும்  வள்ளுவம் !

வாசித்தவருக்கு  வாழ்வியல் நெறி புகட்டும் வள்ளுவம் !
வாழ்வில் வெற்றிக்கு வழி வகுக்கும் வள்ளுவம் !

அகிம்சை தத்துவம் போதிக்கும்  வள்ளுவம் !
அன்பின் வலிமை உணர்த்திடும் வள்ளுவம் !

நன்றியை மறக்காதீர் கற்பிக்கும் வள்ளுவம் !
நல்ல செயல்கள் செய்ய வைக்கும் வள்ளுவம் !

கல்வியின் சிறப்பை சித்தரிக்கும் வள்ளுவம் !
கற்றவரின் மேன்மையைக் காட்டிடும் வள்ளுவம் !

தாயே பசித்திருந்தாலும் தவறு செய்யாதே வள்ளுவம் !
தன்னிகரில்லா அறம் போதிக்கும் அற்புதம் வள்ளுவம் !

விலங்கு குணம் அறவே அகற்றிடும் வள்ளுவம் !
விலங்கிலிருந்து வேறுபடுத்திடும்  வள்ளுவம் !

ஈடு இணையற்ற உலகப் பொதுமறை வள்ளுவம் !
எல்லோரும் போற்றிடும்  பெட்டகம் வள்ளுவம் !

தமிழை அறியாதவரும் அறிந்தது வள்ளுவம் !
தமிழுக்கு மகுடமாக விளங்குவது வள்ளுவம் !

கருத்துகள்