நெல்சன் மண்டேலா புகழுக்கு ஒருபோதும் மறைவு இல்லை ! கவிஞர் இரா .இரவி !

நெல்சன் மண்டேலா புகழுக்கு ஒருபோதும் மறைவு இல்லை !
கவிஞர் இரா .இரவி !

ஆரம்பப்பள்ளி ஆசிரியரால் நெல்சன் என்று
அன்பாகப் பெயரிட்டு அழைக்கப் பட்டவரே !

கருப்பு இனத்தின் விடுதலையின் வீர நெருப்பே !
கருப்பு இருளன்று ஒளியென்று உணர்த்தியவரே !

வெள்ளை இனத்தின் ஆதிக்க வெறியை !
வேரடி மண்ணோடு அறுத்த வீரக் கோடாரியே !

அமைதி வழியில் போராடியது புரியாதபோது !
ஆயுத வழியில் போராடிப் புரிய வைத்தவரே !

எனது எதிரியே எனது ஆயுதத்தைத் தீர்மானிக்கிறான் !
என்று ஆயுதத்தால் பாடம் புகட்டியவ்ரே !

விடுதலைப் போராளிகளின் மானசீக குருவே !
விடுதலையின் விளைவை உலகிற்கு உணர்த்தியவரே !

தடை செய்தபோதும் மனதளவில் என்றும் !
தளராமல் விடுதலை இயக்கம் நடத்தி வென்றவரே !

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலே !
ஓரணியில் மக்களைத் திரட்டிய ஆற்றலே !

நிறத்தால் ஆணவம் பிடித்து அலைந்தவர்களின் !
நிறவெறி ஆணவத்தை அப்புறப் படுத்தியவரே !

கருப்பு வைரங்களைப் பட்டைத் தீட்டி !
கண்டவர் போற்றிட ஒளிர வைத்தவரே !

கருப்பினம் கோழை இனமன்று என்று !
குவளயதிற்குப் பறை சாற்றிய வீரரே !

மன்னிப்பு கேட்டால் விடுதலை என்றபோதும் !
மன்னிப்பு கேட்காத தன்மானமிகு வீரரே !

இருபத்தேழு ஆண்டுகள் சிறையில் வாடியபோதும் !
இனிய கொள்கையில் என்றும் மாறாதவரே !

ஆதிக்க சக்திகளை ஆட்டம் காண வைத்தவரே !
அகில உலகமும் விடுதலைக்குக் குரல் தர வைத்தவர் !

மண்ணில் பிறந்த மனிதர்கள் யாவரும் !
மண்ணுலகில் சமம் என்று உணர்த்தியவரே !

ஆதிக்கத்தின் முகத்திரையைக் கிழித்துக் காட்டியவரே !
அன்புப் புன்னகையை முகத்தில் என்றும் அணிந்தவரே !

தென்னாப்பிரிக்காவில் மக்களாட்சியை மலர்வித்தவரே !
தென்னாப்பிரிக்காவின் முதல் குடியரசுத் தலைவரே !


தொண்டுகள் செய்து மக்கள் மனங்களில் நின்றவரே !
தொன்னூற்றி அய்ந்து அகவை வாழ்ந்து சிறந்தவரே !
.
உந்தன் மறைவு உந்தன் உடலுக்குத்தான் !
ஒருபோதும் மறைவு இல்லை உந்தன் புகழுக்கு !


--

கருத்துகள்