தவிக்கும் தமிழக மீனவர்கள் ! கவிஞர் இரா .இரவி !

தவிக்கும் தமிழக மீனவர்கள் ! கவிஞர் இரா .இரவி !

தானம் தந்த கச்சத்தீவில்
தாவி வந்து தாக்குகிறான்
சிங்களன் !

வலையை அறுக்கிறான்
நிலை குலைய வைக்கிறான்
சிங்களன் !

மீனவர் பயணம்
வந்தது மரணம்
காரணம் சிங்களன் !

கண்டபடிசுடுகிறான்
கண்முடித்தனமாய் தாக்குகிறான்
காட்டுமிராண்டி சிங்களன் !

எல்லைதாண்டி வந்ததாய்ச் சொல்லி
எல்லைதாண்டி வந்து தாக்குகிறான்
சிங்களன் !

மட்டை விளையாட்டில் தோற்றால்
மடையன் தாக்குகிறான்
முட்டாள் சிங்களன் !

தரையில் தவிக்கும் மீனாக
தமிழக மீனவர்கள்
சிரிக்கும் சிங்களன் !

வீரம் காட்டுகிறான்
நிராயுதபாணிகளிடம்
நரிப்பயல் சிங்களன் !

அப்பாவி மீனவர்களிடம்
தப்பாக நடக்கிறான்
அடப்பாவி சிங்களன் !

சேதாரமானது வாழ்வாதாரம்
தமிழக மீனவர்கள் !
காரணம் சிங்களன் !

தவிக்கின்றனர்
தட்டிக் கேட்க நாதியின்றி
மீனவர்கள் !

சுண்டிப்பார்க்கிறது சுண்டைக்காய் நாடு
சொரணையற்று
பேராயக்கட்சி !

வல்லரசிடம் காட்டும் வீரம்
கொடிய அரசிடம் காட்ட மறுப்பதேன்
பேராயக்கட்சி !

ஆயிரக்கணக்கில் கைது
நூற்றுக்கணக்கில் கொலை
வேடிக்கைப்பார்க்கும் பேராயக்கட்சி !

தேவயானிக்கு ஒரு நியாயம்
தமிழக மீனவருக்கு அநியாயம்
பேராயக்கட்சி !

வடவருக்கு துன்பமென்றால் துடிப்பு
தென்னவற்கு துன்பமென்றால் நடிப்பு
பேராயக்கட்சி !
.

கருத்துகள்