"கைபேசி வழியே(எஸ்.எம். எஸ் மூலம்) நிகழ்ந்த கே.கே.ஐ-2000 துளிப்பாப் போட்டியில் வெற்றி பெற்றோர் விபரம் .



அன்பர்களுக்கு என் இனிய மாலை வணக்கம்! "கைபேசி வழியே(எஸ்.எம். எஸ் மூலம்) நிகழ்ந்த கே.கே.ஐ-2000 துளிப்பாப் போட்டியில் வெற்றி பெற்றோர் விபரம் . கவிதைகள் குறித்து!"

முகநூல் நண்பர்களுக்கு வணக்கம்!

"குறுங்கவிதை(Kki) இதழ் நேற்று இரவு மதுரை ஹைக்கூ திலகம், திரு.இரா.இரவி அவர்கள் இப் போட்டிக்கு நடுவராக இருந்து முதலாவது,
இரண்டாவது, மூன்றாவது இடங்களுக்குரிய கவிதைகளைத் தேர்வு செய்து கொடுத்த இரா.இரவி அவர்களுக்கு மிக்க நன்றி!

இத்துளிப்பாப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் "kki இதழுக்கு "அமுதநஞ்சு" எனும் தலைப்பில எழுதியனுப்பியது: 

முதல் பரிசை பெற்ற கவிதை:

1.'முப்போக விளை நிலங்கள் 
   அடுக்கு மாடிக் குடியிருப்புகள் 
    அமுத நஞ்சு!!

இத் துளிப்பாவை எழுதியவர்: புதுப்பட்டிணம், கு.இலக்குமணன்: கைபேசி எண்: 9894506387.

2. அளவுக்கு மிஞ்சினால் 
அமுதமும் நஞ்சாகுமாம்
   ஆனால் உன் அன்பு மட்டும் 
   எனக்குத் திகட்டுவதில்லையே! ஏன்? 

இத் துளிப்பாவை எழுதியவர்: வேலூர், முத்து ஆனந்த்.
கைபேசி எண்: 9629152468.

3. சிறார்களின் சம்பாத்தியம்
    
உலையில் கொதிக்கிறது 
    அமுத நஞ்சு.! 

இத் துளிப்பாவை எழுதியனுப்பியவர்:
சாத்துக்கூடல், கா.இளையராஜா.கைபேசி எண்: 9976193336.
இவர்களுக்குரிய மூன்று பரிசுகளை வழங்கவிருக்கும் நண்பர்: டால்மியாபுரம், ஆர்.துரை அவர்கள். இப் போட்டியில் வெற்றி பெற்று பரிசு பெறக் காத்திருக்கும் துளிப்பாக் கவிஞர்களுக்கு முகநூல் நண்பர்கள் சார்பில் என் இனிய நல்வாழ்த்துக்கள்! மிக்க நன்றி!

கருத்துகள்