ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ ( சென்றியு )   கவிஞர் இரா .இரவி !

முகத்தின் 
ஒளி
புன்னகை !

நோய் நீக்கும் 
மருந்து 
உழைப்பு !

உடலை உருக்கும் 
நோய் 
கவலை !

அறிந்திடுக 
அதிக உணவு 
குறைந்த வாழ்வு !

பயன்படுத்தாவிட்டால் 
துருப்பிடிக்கும் 
இரும்பும்  மூளையும் !

ஆடையாக இருந்தது 
ஆபரணம் ஆனது 
கல்வி !


வரைந்தார்  ஓவியம் 
கைகளின்றி 
வாயால் !
 

கொடுத்தால் 
குறையாமல் வளரும் 
கல்வி !

அமைதியாக்கியது
ஆர்பாட்ட எண்ணங்களை 
தியானம் ! 

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்