ஹைக்கூ ( சென்ரியூ ) கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ  ( சென்ரியூ  ) கவிஞர் இரா .இரவி !

இலை குலை   தந்தும்
வெட்டினான்  வாழையை
திருமணம் !


கண்ணில் தெரிவதில்லை
கடல் நீரில்
உப்பு !

பூனையிடம்
சிக்கிய எலியாக
மக்கள் !

ஊரெல்லாம் பிரபலம்
வீட்டில் இடி
படைப்பாளி !

கொடியது
வாதத்தை விட
பிடிவாதம் !

சின்னத் திருட்டு சிறை
பெரியத் திருட்டு குளு  குளு அறை
ஊழல் !

போக்குவரத்துக்கு நெரிசல்
வானத்திலும் வந்தது
விமானம் !

கையில் ஜெபமாலை
கண்ணில் காமம்
சாமியார் !

கிணற்றில்  தள்ளி
கல்லையும் போடுகின்றனர்
விலைவாசி !

ருசிதான்
வேப்பம் பழமும்  
காகத்திற்கு  !

அடங்கு
வீரியத்தை விட
காரியம் பெரிது !
.
கத்தரிக்காய் வாங்கினால்
பூசணிக்காய் இலவசம்
ஏமாற்று வணிகம் !

கட்டுப்படுத்தும்
கால் விலங்கு
மனைவி !

விவசாயத்தின்
ஒரு அங்கம்
களை எடுப்பு !

தானியம் தராவிட்டாலும்
அழகுதான்
பசும்புல் !  




நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்