ரத்த தானம் ! கவிஞர் இரா .இரவி !

ரத்த தானம் !   கவிஞர் இரா .இரவி !


தானத்தில் சிறந்தது ரத்த தானம் !   
தானத்தால் வாழ்கிறது உயிர்கள் தினம் !

குருதிக்கொடை வழங்கிடுக மனம் உவந்து 
உறுதியாக உறுதி பெரும் பெற்றவர் உயிர் !

விபத்தில் காயம் பட்டவர்களுக்குத் தேவை குருதி !
விரைவில் ஏற்றினால் உயிர் பிரியாது வாழும் !

பிஞ்சுக் குழந்தைகளுக்கு தேவைப்படும் குருதி !
பிஞ்சு மொட்டுகள் கருகாமல் காக்கும் குருதி !

நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் தேவைப்படும் குருதி !
நோய் நீங்கிட உதவிடும் வழங்கிடும் குருதி !

ரத்ததானம் வழங்குவது மனிதநேயம் !
ரத்ததானம் வழங்கிட விழிப்புணர்வு வேண்டும் !

ரத்த தானத்தால் பிழைத்த உயிர்கள்  பல !
ரத்த தானத்தால் வாழும் உயிர்கள்  பல !

பணம் தருவதை விட ரத்தம் தருவது மேல் !
குணம் இருந்தால் போதும் கொடுக்கலாம் !

அகவிழி பார்வையற்றோர் விடுதி நிறுவனருடன் ! 
அனைவரும் ஆண்டுதோறும் தருகின்றனர் !

நானும் அவர்களோடு சேர்ந்து தருகின்றேன் !
நன்மை செய்தால் நன்மை கிட்டும் நமக்கு !

பார்வையற்றோர் பயமின்றி குருதி தருகின்றனர் !
பார்வையுள்ளோர் பயப்படுகின்றனர் குருதி தருவதற்கு !

இறைக்கும் கிணறுதான் தானே ஊரும் !
இரக்கத்துடன் ரத்தம் தந்தால்  தானே ஊரும் !

உதவிடும் உள்ளமே மனிதனின் மகத்துவம் !
உதிரம் தந்து உதவுவது உயர்ந்த உள்ளம் !

உயிர் காக்கும் பணி  ஒப்பற்ற பணி !
இனிதே மனம் உவந்து உதவுவது நற்பணி !

தர்மம் தலை காக்கும் என்பார்கள் !
தரும் ரத்தம் தலை காக்கும் உண்மை !

மனிதனை மனிதன் காப்பது கடமை !
மனிதனாகப் பிறந்ததன் அர்த்தம் விளங்கும் !

கொடைகளில் சிறந்த கொடை குருதிக்கொடை !
கொடைக் கொடுத்து காப்போம் உயிர்களை !

தன்னலமாக வாழ்வது வாழ்க்கை அன்று !
பொதுநலமாக வாழும் வாழ்க்கை நன்று !

தான் உண்டு தன்  உயிர் உண்டு வாழ்வது  நன்றன்று !
தான் உண்டு பிறருக்குத் தொண்டு உண்டு வாழ் நன்று !

.


.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்