அருவி ! கவிதை இலக்கிய காலாண்டிதழ் இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர் ந .சீனிவாசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

அருவி !

கவிதை இலக்கிய காலாண்டிதழ் 

 இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன் !செல் 9600898806

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

தனி இதழ் 25 .ஆண்டு சந்தா 100.
14.நேரு பஜார் ,திமிரி .632512.ஆற்காடு வட்டம் ,வேலூர்  மாவட்டம்  .

கவிதை கவிதை கவிதை தவிர வேறொன்றுமில்லை சொல்லும் வகையில் முழுக்க   முழுக்க   கவிதைகள் மட்டுமே .முத்தமிழ்    போல ,முப்பால் போல , முக்கனி போல   மரபுக் கவிதை , புதுக் கவிதை , ஹைக்கூ கவிதை மூன்று  வகைப்பாவும்   உள்ளன . பாராட்டுக்கள் .ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன் அவர்களின் கடின உழைப்பை உணர முடிகின்றது .128 பக்கங்கள் உள்ளன .102 பக்கங்கள் கவிதைகள் . 26 பக்கங்கள் நூல் விமர்சனங்கள்,  மடல்கள் உள்ளன . படித்து விட்டு தூக்கிப்போடும் சராசரி இதழ் அல்ல இது .பாதுக்காப்பாக வைத்து இருந்து , கவிதையின்  மீது காதல் வரும் நேரமெல்லாம் எடுத்துப் படிக்கும் நூல் இது .

.94 கவிஞர்களின்    பெயர் செல் எண்ணுடன் பிரசுரம் செய்து படைப்பாளிகள்  ஒருவர்க்கு ஒருவர்  தொடர்பு கொள்ள வசதியாக பாலமாக உள்ள்ளார் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன் .கவிதைகளைத்    தேர்ந்தெடுத்து பிரசுரம் செய்து இருப்பதால் படிக்க மிகச் சுவையாக உள்ளன . நூலில் உள்ள அனைத்துக்  கவிதைகளும் சிறப்பாக இருந்தாலும் பதச் சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு . 
 மரபுக் கவிதை மனதில் தங்கும் கவிதை .தமிழன் பெருமையை, அருமையைப் பறை சாற்றும் கவிதை .நூலின் அட்டையில் உள்ள இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர்  ந .சீனிவாசன் ! கவிதை மிக நன்று

முனைவர் ஆலந்தூர் கோ .மோகனரங்கன் .

பொன்கொடுத்தால் நிறைந்திடுமா நெஞ்சம் ? கொஞ்சம் 
புதுவாழ்வில் தமிழிருக்க  வேண்டா  மா ? சொல் ! 

கண்கொடுத்தால் போதாது ! சுவைப்ப  தற்குக்   
கரும்புதந்தால்  போதாது !வையம் ஆளும் 

மண்கொடுத்தால் போதாது ! வனப்புமிக்க 
மாளிகையும் போதாது ! தமிழ்தான் வாழ்வில் 

பெருஞ்செல்வம் என்றுணர்ந்து புரிப்போமே !

 தேர்தல்அவலம்   பற்றி வென்ற  வேட்பாளர்களின்  நிலை பற்றி உணர்த்தும் கவிதை ஒன்று மிக நன்று .

சுவாமி .இராமானுஜம் பெங்களூர் 

பரிவும் பாசமும் இனிப்பாய் வரும் 
தேர்தல் முடிந்த மூன்றாம் நாள் 

முனியனையும்  கலியனையும் 
காமாட்சியையும் மீனாட்சியையும் 

யார் நீ !என்று கேட்பார் .இதுதான் வழக்கம் !
இருப்பினும் அடுத்தமுறையும் வருவார் 

அன்புடன் வரவேற்பது நமது பழக்கம் 
மறப்பது நமது மாண்பு .
மறதி     வாழ்க !

திண்ணைகள் அழிந்து வரும்  காலத்தில் திண்ணையை நினைவூட்டும் கவிதை .

பாவலர் கருமலைப்பழம்  நீ  . சென்னை .39.

ஓரிரு கிராமங்களில் இன்றும் 
ஆயிரம் கதைகளைச் 
சொல்லிக் கொண்டிருக்கின்றன 
திண்ணைகள் .

பிள்ளைகளின் ஆடுங்களமாய்  ,
பாடுங்களமாய் ,

வெட்டிப்  பேச்சுகளின் அரங்கமாய் ,
முதியோர்களுக்கு படுக்கை விரிப்பாய் 

பூனைக்கும் நாய்க்கும்  
இளைப்பாறல் இடமாய் ...

இன்பம்  பகிந்து கொண்டால் இரட்டிப்பாகும் .துன்பம் பகிந்து கொண்டால் பாதியாகும் .இந்த உண்மை அறியாமல் பலர் துன்பத்தை பகிர்வதே இல்லை .அதனை உணர்த்தும் கவிதை .

கவிஞர்  கா .ந .கல்யாணசுந்தரம் .

ஆம் 
பிறரிடம் பகிரப்படாத 
துன்பங்களுடன்  எனது 
மனமும் முன்வரிசையில் 
அமர்ந்திருக்கிறது .

பாரம் சுமப்போர் போட்டியில்  
கலந்துகொள்ள 
தோள்களின் தோழமையோடு !

பறவைகள் பேசுவது போன்ற கவிதை மூலம் கவிஞர் நம்முடன் பேசும் கவிதை நன்று  .
 
கவிஞர் சோ .சரவணபவா .திமிரி .

நாங்கள்  வண்ணத்தோடு  மட்டுமே 
வாழ்கிறோம் .
வருணத்தோடு   இல்லை .

சாதி சாத்திரம் 
எங்களிடம் கிடையாது .

எங்கள் காதலால் 
எந்த ஊரும் எரியாது .

நல்ல வேளை 
நாங்கள் மனிதர்களாக 
பிறக்கவில்லை .

அப்படி பிறந்திருந்தால் 
விண்ணைத் தொடும் சிறகுகள் 
முளைக்காமல் போயிருக்கும் ... !  

மீசை மீது ஆசையில்லா  ஆண்  இல்லை .ஆணின் மன உணர்வை படம் பிடித்துக் காடும் கவிதை நன்று .

கவிஞர் பொன் குமார் .சேலம் .

அம்மா  இறந்தபோது 
காரியத்திற்காக மழிக்கப்பட்டது .
அம்மா இல்லாததை விடவும் 
அதிகமாகவே   கவலையளித்தது 
முகத்தில் இல்லாத   மீசை !

பிறந்த மண் பாசம் எல்லோருக்கும் உண்டு .பிறந்த மண்ணைப்  பிரியும் வலி சொல்லில் அடங்காது .கிராமிய மொழியில் ஒரு கவிதை மிக இயல்பாக உள்ளது .

கவிஞர் பாரியன்பன்  . குடியாத்தம்  .

இப்ப என் மவன் மேல்படிப்புக்கு 
குடும்பத்தோட எல்லோருமா டவுனுக்கு குடியிறுக்க 

எம் பொண்டாட்டி சொல்றா 
ஒறவைக் கூட பிரின்சிரலாம் சொந்த ஊரைப் பிரியிறது 
ரொம்ப கஷ்டம்டா மவனே !  

எனது ஹைக்கூ கவிதைகளும்    நூலில் இடம் பெற்றுள்ளன . ஹைக்கூ கவிதைகள் யாவும் மிக நன்று . சில மட்டும் உங்கள் பார்வைக்கு .

அமுதபாரதி  . சென்னை .

ஒவ்வொரு கணத்தையும்  
உணர்த்துகிறது 
ஓடும் கடிகாரம் !

இரா .தயாளன் .திருவாய்நல்லூர் .

எறும்புகள் தூக்கி செல்கிறது 
வண்ணத்துப்பூச்சியின்   
இறுதி ஊர்வலம் !

கவிஞர்  ஆரிசன்  கீழக் கொடுங்காலூர்  .

இறந்தவர் கொடை 
மரணத்திலும் உயிர்பெற்றது 
கண்கள் ! 

நூல் முழுவதும் கவிதைகள் உள்ளன .வாசகனை சிந்திக்க வைக்கின்றன . இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர் 
 ந .சீனிவாசன்அவர்களுக்கு பாராட்டுக்கள் .தமிழ்த் தேனீ  முனைவர் இரா  .மோகன்  - முனைவர் நிர்மலா மோகன் இலக்கிய இணையர்  நல்லிதழ் விருது .அருவிக்கு - பொதிகை மின்னல் தமிழ்ப்பணி  வழங்கி சிறப்பித்துள்ளது .விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் . 

கருத்துகள்