ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இர .இரவி !

ஹைக்கூ  ( சென்றியு )    கவிஞர் இர .இரவி !

பாலைவன வெயிலில் 
நடந்தும் வியர்ப்பதில்லை 
ஒட்டகம் !

கணினியுகத்தில் 
காட்டுமிராண்டித்தனம் 
கெள்ரவக் கொலை !

விற்றப்பின்னும் 
மனம் வீசியது 
பூக்கூடை !

திறக்கவரவில்லை 
அவசரத்திற்கு அவசரமாக 
அவசர வழி !

நிறமோ வெள்ளை 
பெயரோ 
வெள்ளாடு !

வந்து சேர்ந்தது 
அணைந்து முடிந்ததும் 
தீ அணைப்பு வண்டி !

முட்டாளாக்கி 
முடிந்தளவுக்குச் சுருட்டு 
சாமியார்கள் மூளை !

மலர்ந்த மலர் 
மழலையின் சிரிப்பு 
மனதிற்கு மகிழ்வு !
  


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்