ஹைக்கூ ( சென்ரியூ ) கவிஞர் இரா .இரவி .

ஹைக்கூ    ( சென்ரியூ  ) கவிஞர் இரா .இரவி .

முறிந்தது 
முதுகெலும்பு 
விசாயம் !

வாடியப் பயிரைக் கண்டால் 
வாடும் வள்ளலார் 
விசாயி ! 

நீர் உயர 
தானும் உயரும் 
தாமரை !

வெட்கும் 
அக்றிணை 
நாணல் !

இயந்திரமனிதன் விஞ்ஞானம் 
மனிதன் இயந்திரமானான் 
உலகமயம் !

ஆரம்பத்தில் கிட்டும் 
அப்புறம் கிட்டாது 
நல்லபெயர் மனைவியிடம் !

தானம் தர   முடியாதது 
தானே பயன்படுத்துவது சிறப்பு 
மூளை !

அயல்நாட்டில் இல்லை 
நம்நாட்டில் தொல்லை 
சாதி !

யானையின் மதமானது 
மனிதனின் 
மதம் !

பறிபோனது 
பகுத்தறிவு 
சாதி மத வெறி !

வரவேண்டும் இயற்கையாக 
வரக்கூடாது செயற்கையாக 
மரணம் !

மகத்தானது 
மதிக்க வேண்டியது 
மனிதநேயம் !



.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்