ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ ( சென்றியு )  கவிஞர் இரா .இரவி !

வழி  மேல் விழி வைத்து 
முதியோர் இல்லத்தில் 
முதியோர்கள்   ! 



நேரம் கிடைத்தால் 
ரசித்து மகிழுங்கள் 
வானம் !

உதட்டில் புன்னகை 
உள்ளத்தில் ரணம் 
திருநங்கைகள் !

வாசிக்க சுகம் 
ரசிக்கும் மனம் 
கவிதை !

வாக்குப்பிச்சை எடுத்தவர்களிடம் 
வாக்குப்பிச்சை 
மேல்சபை தேர்தல் !

மரங்களை வெட்டி 
யாகம் நடந்தது 
மழைக்காக !

வேண்டாம் வன்சொல் 
வாடிடும் பிஞ்சு 
அன்போடு கொஞ்சு !

வெள்ளத்தில் பக்தர்கள்
காக்கவில்லை 
கடவுள் !

மின்தடையிலும் 
ஒளிர்ந்தது 
மின்மினி !

அன்று சேவைக்காக 
இன்று தேவைக்காக 
அரசியல் !

அன்று மக்களுக்காக 
இன்று தன் மக்களுக்காக 
அரசியல் !

கற்பித்தன ஒழுக்கம் 
காந்தியடிகளின் 
மூன்று குரங்குகள் !

திறந்திடுவார்கள் 
உடையுமோ  பயத்தில் 
அணை !

பைத்திமாகியும் 
காரியமாக 
அரசியல்வாதி !
 


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்