விழி இழந்தும் அறிவுப் பார்வை உண்டு எங்களுக்கு ! கவிஞர் இரா .இரவி !

விழி இழந்தும் அறிவுப் பார்வை உண்டு எங்களுக்கு ! கவிஞர் இரா .இரவி !

எங்கள் வாழ்வில் இரவும் பகலும் 
இரண்டும் ஒன்று !

விளக்கு அணைந்த வினாடிகளில் 
நீங்கள் அடையும் தவிப்பு !

வாழ்நாள் முழுவதும் வாடிக்கையானது !
விழிகளில் பார்வை இழந்த எங்களுக்கு !

கண்ணாமூச்சு விளையாடி 
கால் தவறி விழுவீர்கள் !

காலமெல்லாம் எங்களுக்குக் 
கண்ணாமூச்சு விளையாட்டானது !

கண்ணில் தூசி விழுந்தால் 
கணப் பொழுதில் துடிப்பீர்கள் !

கண்களே தூசியானதால் 
தூசி விழுந்து துடிப்பதில்லை !

பின்புறமாய வந்து விழிகளை மூடி 
யார் என்று வினவுவர் !

பதில் கூற  இயலாது 
பறி தவிப்பீர் கண்ணுடையோர் !

காதுகளே எங்களுக்குக் கண்களானதால் 
குரலை வைத்தே கூறிடுவோம் !

எங்களின்  விரல்களே விழிகள் !
விரல்களால் தானே வாசிக்கின்றோம் !

விழியிருந்தும் அறிவுப் பார்வையற்றோர் உண்டு 
விழி இழந்தும் அறிவுப் பார்வை உண்டு எங்களுக்கு !


.http://agavizhi.in/
.

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்