கவிதைக் கீற்றுகள் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !


கவிதைக் கீற்றுகள் !

நூல் ஆரிசியர்கள் சச்சிதானந்த  ஜோதி நிகேதன்  மாணவர்கள் !
தொகுப்பு  ஆசிரியர் வீ .கே .கார்திகேயன் தமிழ்த்துறை !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

சச்சிதானந்த  ஜோதி நிகேதன் பள்ளிச் செயலர் கவிஞர் கவிதாசன் அணிந்துரை மிக நன்று மலருங்கள் மாணவர்களே !என்று சிறப்பாக  தொடங்கி உள்ளார் .கோவை சென்னை வானொலி நிலைய முன்னாள் இயக்குனர் ஜே .கமலநாதன் வாழ்த்துரை ,தொகுப்பு  ஆசிரியர் வீ .கே .கார்திகேயன் தமிழ்த்துறை அவர்களின் தொகுப்புரை நூலிற்கு அழகு சேர்க்கின்றது .

.மாணவ மாணவியருக்கு கவிதை எழுதுவது  குறித்த பயிற்சி தந்து படைப்ப்பாற்றலை உருவாக்கி படைக்க வைத்து நூள்ளாகி உள்ளனர் .பாராட்டுக்கள்  
விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்ற பொன்மொழிக்கு ஏற்ப வருங்கால கவிஞர்களான நிகழ கால மாணவர்களின் சிந்தனை மிக்க கவிதைகளின் தொகுப்பு ஆசிரியர்கள் படைப்பும் நூலில் உள்ளது .  

மற்ற பள்ளிகளிலும் இதுபோன்ற நூல்கள் வெளியிட  முன் வர வேண்டும் .மாணவர்களை கல்வி தாண்டிய திறமைகளை வளர்க்க முன் வர வேண்டும் .தலைப்புகளில் வீரியம் மிக்க புதுக்கவிதைகளை வடித்து உள்ளனர் .பதச் சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு .

ஆசிரியர் !
ஏ .சுதிக்ஷா  !7ஆம் வகுப்பு அ .

சிலை செதுக்க
சிற்பி வேண்டும் !
அறிவைச் செதுக்க
ஆசிரியர் வேண்டும்
---------------------
தாயே! 
ப. மு .ஜெய் .வைஷ்ணவி 6ஆம் வகுப்பு அ .

ஓர் அன்பு இல்லம்
முதுமையில் அவள் ஏன்
அனாதை இல்லத்தில் ?

----------------------
அம்மா  !  
சு .மந்த்ரா  பிரதொஷினி 8 ஆம் வகுப்பு ஆ 

ஒவ்வொரு ஊருக்கும்
தெய்வம் கோவிலில்
எனக்குத் தெய்வம்
என் வீட்டில் ...
தாய் !
-----------------------
 மழை !   
வி .கா .செந்தில்குமார் 6 ஆம் வகுப்பு இ .

மரம் வளர மழை வேண்டும் !
ஆனால்
மழை வர மரம் வேண்டும் !
-------------------------------
கடிகாரம் ! 
ஏ .கிஷோர் குமார் 6ஆம் வகுப்பு இ .

முட்களை நகர்த்தி
நாள் முழுவதும் உழைக்கிறாய் ...
மாணவர்க்கு
நீயே வழிகாட்டி !
-------------------------
கல்வி !    
ல .ரிதன்யா 7ஆம் வகுப்பு அ .

கண்ணாடி முகம்   காட்டும் !
கடிகாரம் நேரம் காட்டும் !
கலங்கரை விளக்கு கரை காட்டும் !
கல்வியே உலகைக் காட்டும் !
 ----------------------------------

  மரம் !  
கு .ரேஷ்மி 5 ஆம் வகுப்பு ஆ .

பூக்கள்   கொடுக்கிறாய் !
பட்டாம்பூச்சிக்குத் 
தேன் கொடுக்கிறாய் !
பறவைகளுக்கு 
வீடு கொடுக்கிறாய் !
மனத்தான் ஏன் உனக்கு 
அழிவையே கொடுக்கிறான் ?
.-------------------------------------------------
பசி ! 
சு .சக்திவேல் !முதுநிலைத் தமிழாசிரியர் !

வயிற்று ப் பசி தீர 
உண்டால் 
உறக்கம் வரும் !
அறிவுப் பசி தீர 
படித்தால் 
உயர்வு வரும் !

புதுக் கவிதைகளின் மூலம் சிந்தனை மின்னல் விதைத்து ஊலனர் .கவிதைக் கீற்றுகள் அல்ல மின்னல் கீற்றுகள் .சிந்திக்க வைக்கும் கருத்துக்கள் உள்ளது .
மாணவர் , மாணவியர் ,ஆசிரியர் மூவரின் புதுக் கவிதைகளும் நூலில் உள்ளது .பாராட்டுக்கள் .இது கன்னி முயற்சி .முதல் முயற்சி .தொடர்ந்து வருடா வருடம் வெளியிடுங்கள் .இன்னும் செறிவான கவிதைகள் மலரும் .மொட்டுகளின் வாசம் மிக நன்று .மலராகும் போது இன்னும் மணம் வீசும் .மாணவர்களை பாடநூல்கள் மட்டுமன்றி வேறு பல இலக்கிய நூல்களையும் படித்து படைப்பாற்றலை மேலும் வளர்த்துக் கொள்ள உதவிய சிந்தைக் கவிஞர் கவிதாசன் அவர்களுக்கும் ,பள்ளி நிர்வாகத்தினருக்கும் பாராட்டுக்கள் .
-- 

கருத்துகள்