மனித விலங்குக்கு மனசாட்சி இருக்குமா ? கவிஞர் இரா .இரவி !


மனித விலங்குக்கு மனசாட்சி இருக்குமா ? 
 கவிஞர் இரா .இரவி !

சிறுமியின் கால் சிதைந்தது !
சின்னப் புத்திக்காரன் உன் வெடிகுண்டால் !

வெள்ளைக் கோடி ஏந்தி வந்தவர்களையும் 
வெட்ட வெளியில் சுட்டவனே !

மருத்துவமனைகள் மீதும் வானூர்தி வழி 
குண்டு மழை  பொழிந்தவனே !

நேருக்கு நேர் மோதிட முடியாமல் 
குறுக்கு வழியில் சதி செய்தவனே !

சிறுவனிடம் வீரம் காட்டிய 
சிங்கள ஓநாய்களின் செயல் கொடூரம் !

பன்னாட்டு ராணுவத்  துணையுடன் 
உள்  நாட்டு மக்களைக் கொன்ற கொடியவனே !

காட்டிக் கொடுத்த கயவன் துணையுடன் !
கண்ணான தமிழினத்தை அழித்த வெறியனே !

புத்தப் பிட்சுகளுக்கு இனி என்றும் 
புத்தரை வணங்கும் தகுதி இல்லை !

வாய் மூடி மவுனமாக வேடிக்கைப் பார்த்தனர் !
நாங்கள் மன்னித்தாலும் புத்தர் மன்னிக்க மாட்டார் !

கொலைகள் கண்டிக்காமல் இருந்துவிட்டு 
கலைநயமிக்க புத்தரை வணங்குவதில் பயனில்லை !

கோயில்களை குண்டுகளால் தகர்த்து விட்டு 
கோயில் வந்து திருப்பதி வணங்கும் நீசனே !

அய் நா .விடம் நீ தப்பிக்கலாம் !
அமெரிக்காவிடம் தப்பிக்கலாம் !
 
உன் மனசாட்சியிடம் தப்பிக்க முடியுமா ?
உனக்கு மனசாட்சி இருக்காது !

மனிதருக்குதானே மனசாட்சி இருக்கும் !
மனிதவிலங்குக்கு மனசாட்சி இருக்குமா ?

பயத்தால் தினம் நீ செத்து செத்துப்  பிழைக்கிறாய் !
பாதியில் முடியும் உன் பயணம் இது  உறுதி !

எண்ணிக் கொள் நாட்களை வெகு விரைவில் !
எவரும் காக்க முடியாது உனக்கு வரும் இறுதி !

உன் கதை முடிக்காமல் எமக்கு வராது இறுதி !
உன் கதை முடியும் நாள் எமக்கு தீபாவளி !

ஆதிக்கம் நிலைத்ததாக வரலாறு இல்லை !
ஆதிக்கம்  ஒழியும் !அடிமை விலங்கு உடையும் !

விரைவில் தனித் தமிழ் ஈழம் மலரும் !
விண் முட்ட தமிழரின் கொடி பறக்கும் !

-- 

.

கருத்துகள்