மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !

மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின்
சார்பில் தன் முன்னேற்றப் பயிலரங்கம் சிபி கல்லூரியில் நடைபெற்றது
.வாசகர் வட்டத்தின் தலைவர் எ.எஸ் .ராஜராஜன் வரவேற்றார் .வாசகர்
வட்டத்தின் செயலர் கவிஞர் இரா .இரவி தலைமை வகித்தார் . ஒருங்கிணைப்பாளர்திருச்சி சந்தர் முன்னிலை வகித்தார்.
கவிஞர் பேனா மனோகரன் காவல்துறை D.S.P.( ஒய்வு )
,திரு ராஜேந்திரன் ஆகியோர்   வாழ்த்துரை வழங்கினார்கள்
  மேலாளர்  (வேளாண் சந்தைப்படுத்துதல் ) 
"திரு .ஆ .முத்துக்கிருஷ்ணன்  உலகம் அழியாதிருக்க தன்னம்பிக்கை  என்ற தலைப்பில் தன்  முன்னேற்றப் பயிற்சி அளித்தார் .   பாலிதீன் பயன்படுத்தாதிருத்தல் ,பாட்டில் குளிர்பானங்கள் குடிக்காதிருத்தல் ,ஒலிமாசு தரும் வெடிகள் வெடிக்காதிருத்தல் ,பயன்பாடு இல்லாத போது மின் .மின் அணு சாதனங்கள் அணைத்து வைத்தல் ,பி.வி .சி போன்ற பைப்புகளை பயன்படுத்தாதிருத்தல்
,தண்ணீர் வீணாவதை தடுத்தல் ,கழிவு நீரை சுத்தம் செய்து மறு சுழற்சி முறையில் பயன்படுத்துதல் ,சூரிய ஒளி  வழி  மின்சாரம் எடுத்தல் ,மலை போக்காமல் இருக்க மரங்களை வெட்டாதிருப்போம் எல்லோரும் கடைபிடித்தால் உலகம் அழியாது என்றார் ., திரு .தினேஷ் நன்றி கூறினார் .

தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தினர் திரு.பாண்டியன் ,
திரு .கார்த்திகேயன்,  உள்ளிட்ட   பலர் கலந்துக் கொண்டு
விழாவை சிறப்பித்தனர் .

கருத்துகள்