மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !

மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின்
சார்பில் தன் முன்னேற்றப் பயிலரங்கம் சிபி கல்லூரியில் நடைபெற்றது
.வாசகர் வட்டத்தின் தலைவர் எ.எஸ் .ராஜராஜன் வரவேற்றார் .வாசகர்
வட்டத்தின் செயலர் கவிஞர் இரா .இரவி தலைமை வகித்தார் . ஒருங்கிணைப்பாளர்
திருச்சி சந்தர் முன்னிலை வகித்தார்.

திரு .ஜோதி மகாலிங்கம் , திரு  கலாம் கே ஆர் .சுப்பிரமணி ,
திரு .ஆ .முத்துக்கிருஷ்ணன் ,திரு G. ராம மூர்த்தி ,திரு .அழகர் சுவாமி
ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

கவிஞர்கள் இரா .கல்யாண சுந்தரம் ,கே.விஸ்வநாதன்,சந்துரு ஆகியோர்
தன்னம்பிக்கை கவிதை வாசித்தனர் .

  பட்டி மன்ற நடுவர் குகசீல ரூபன் "நமக்கு நாமே " என்ற தலைப்பில் தன்
முன்னேற்றப் பயிற்சி அளித்தார் .  நமக்கு நாமே தனம்பிக்கை மிக்கவர்களாக
இருக்க வேண்டும் .நமை பற்றி எதிர் மறையாக "உன்னால் முடியாது" என்று
பேசுவோர் கருத்தை கவனிக்காமல் ,நம் மீது நமக்கு நம்பிக்கை வேண்டும்
."முடியும் என்றே முயன்றால் எதுவும் முடியும் ". பல பயனுள்ள கருத்துக்கள்
கூறி பயிற்சி அளித்தார் .மாணவி செல்வ பிரித்தா தன்னம்பிக்கை கருத்துக்
கூறினார் .  திருமதி லதா குமாரி  சுப்பிரமணி நன்றி கூறினார் .

தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தினர் திரு.பாண்டியன் ,
திரு .கார்த்திகேயன்,திரு சம்பத்  உள்ளிட்ட   பலர் கலந்துக் கொண்டு
விழாவை சிறப்பித்தனர் .
--


கருத்துகள்