பொங்கல் நல் வாழ்த்துக்கள் !கவிஞர் இரா .இரவி !

Inline image 1
பொங்கல் நல்  வாழ்த்துக்கள் !கவிஞர் இரா .இரவி !
உழைப்பைப் போற்றும் பொன் நாள் 
உலகம் போற்றும் நன் நாள் 
நெல் விளைந்த பூமிக்கும் 
நெல் விளைவித்த கதிரவனுக்கும் 
உழவுக்குத்  துணை புரிந்த மாட்டுக்கும் 
உன்னத நன்றி சொல்லும் திருநாள் !
நன்றி மறக்காதவன் தமிழன் !
நன்றியை இயற்கைக்கே சொல்பவன் !
நன்றியை மனிதருக்குச்   சொல்ல மறக்காதவன் !
உலகின் முதல் மொழி தமிழ் !
உலகின் முதல் மனிதன் தமிழன் !
உலக மொழிகளின் தாய் தமிழ் !
உலக மனிதர்களின் முதல்வன் தமிழன் !
உலகிற்கு பண்பாடு பயிற்றுவித்தவன் தமிழன் !
உலகிற்கு  ஒழுக்கம் ஓதியவன்  தமிழன் !
உலகிற்கு விவசாயம் கற்பித்தவன் தமிழன் !
உலகிற்கு பொதுமறை தந்தவன் தமிழன் !
உலகிற்கு முன் மாதிரியானவன் தமிழன் !
உலகின் முதல் அணைக்கட்டு கட்டியவன் தமிழன் !
உலகில் பெரியகோயில் ட்டியவன் தமிழன் !
கட்டிடக் கலையில் நுட்பம் விதைத்தவன் தமிழன் !
கல்லில் கலை வண்ணம் கண்டவன் தமிழன் !
கடல் தாண்டி சென்று வணிகம் செய்தவன் தமிழன் !
கடலில் மூழ்கி முத்து எடுத்தவன் தமிழன் !
அன்றே முப்படை அமைத்தவன் தமிழன் !
நன்றே முத்தமிழ் வளர்த்தவன் தமிழன் !
உலகில் வீரத்தை விதைத்தவன் தமிழன் !
உலகில் நிகரில்லா திறமைக்காரன் தமிழன் !
தமிழனாகப் பிறந்ததற்குப் பெருமை கொள்வோம் !
தமிழர் திருநாளை  மகிழ்வோடு கொண்டாடுவோம் !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response

கருத்துகள்