பட்டிமன்றம் நடைபெற்றது


மதுரை திருப்பரங்குன்றம் வெயிலுகந்த அம்மன் கோயில் குட முழுக்கு விழாவை முன்னிட்டு பட்டிமன்றம்  நடைபெற்றது .பட்டிமன்றத்தை வழக்கறிஞர் சிவா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார் .  தமிழ்ச்சுடர், முனைவர் நிர்மலா மோகன் அவர்களை நடுவராகக் கொண்டு , வாழ்க்கை சிறக்கப் பெரிதும் தேவை  குணமே ! என்று கவிஞர் இரா .இரவியும் ,கவிமுரசு ச .திருநாவுக்கரசும்  வாதிட்டனர் .பணமே ! என்று நகைச் சுவைத் தென்றல் முத்து இளங்கோவனும் சொல்லின் செல்வி திருமதி சங்கீத்  ராதாவும் வாதிட்டனர்.வாழ்க்கை சிறக்கப் பெரிதும் தேவை குணமே  ! என்று நடுவர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் தீர்ப்பு வழங்கினார்கள் . திருப்பரங்குன்றம் பகுதி வாழ் மக்கள் பெருமளவில் வருகை தந்து சிறப்பித்தனர் .

கருத்துகள்