உலக சுற்றுலா தின விழா !

உலக சுற்றுலா தின விழா !

உலக சுற்றுலா தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சுற்றுலாத்  துறையின் சார்பிலும் ,ட்ராவல் கிளப் சார்பிலும் அன்னை பாத்திமா ,ஓரியண்டல்  கல்லூரிகளின்  மாணவ  மாணவியரின் சுற்றுலா விழிப்புணர்வு பாரம்பரிய நடைப்பயணம் நடைபெற்றது .மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அன்சுல் மிஸ்ரா அவர்கள் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்கள் .
பாரம்பரிய சுற்றுலாத் தலங்கள் வழி நடைப்பயணம் சென்று திருமலை நாயக்கர் அரண்மனை அடைந்தது. உதவி சுற்றுலா அலுவலர் இரா இரவி திருமலை நாயக்கர் அரண்மனை வரலாறு கூறினார் .பேராசிரியர் வெங்கட்ராமன் மதுரை வரலாறு வரலாறு கூறினார் .
தொல்லியல்த் துறை உதவி இயக்குனர் நாக கணேசன் , திருமலை நாயக்கர் அரண்மனை கட்டிய மன்னர் கூ  தன் பெயர்பொறிக்க வில்லை.ஆனால் பார்வையிட வருபவர்கள்  பெயர் பொறித்து சேதப்படுத்துகின்றனர் .இது தவறு.என்று எடுத்துக் கூறினார் .
  பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ மாணவியருக்கு  பரிசுகள் வழங்கப்  பட்டது . விழாவிற்கான ஏற்பாட்டை சுற்றுலா அலுவலர் க .தர்மராஜ் தலைமையில்  உதவி சுற்றுலா அலுவலர்கள்  இரா இரவி ,சிவகுமார் ,உமா தேவி ,நெல்சன் ,மற்றும் அலுவலகப் பணியாளர்கள் செய்து இருந்தார்கள் .

கருத்துகள்