மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !

மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !
   

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் சார்பில் தன் முன்னேற்றப் பயிலரங்கம்    நடைபெற்றது .வாசகர் வட்டத்தின் தலைவர் எ.எஸ் .ராஜராஜன் வரவேற்றார் .வாசகர் வட்டத்தின் செயலர் கவிஞர் இரா .இரவி தலைமை வகித்தார் .ஒருங்கிணைப்பாளர் திருச்சி சந்தர் முன்னிலை  உரையாற்றினார்  . திரு .ஜோதி மகாலிங்கம் , திரு .ராமமூர்த்தி , திரு .சரவணன்  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் .கவிஞர்கள் இரா .கல்யாண சுந்தரம் ,விஸ்வநாதன் , சந்துரு ஆகியோர் தன்னம்பிக்கை தொடர்பான கவிதை வாசித்தனர் .மதுரை கலைஞர்கள் கவிஞர் வாசகன் "தன்னம்பிக்கையே மூலதனம்" என்ற தலைப்பில் தோல்விக்குத் துவளாமல் தொடந்து முயன்று வெற்றிப்  பெற்றவர்களின் வரலாறு சொல்லி தன் முன்னேற்றப் பயிற்சி அளித்தார் .திரு தினேஷ் நன்றி கூறினார் .தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தினர்   பலர் கலந்துக் கொண்டு விழாவை சிறப்பித்தனர் .

--

கருத்துகள்