மாணவ மாணவியருக்கு பாராட்டு விழா

மாணவ மாணவியருக்கு பாராட்டு விழா
மதுரை மணியம்மை தொடக்கப் பள்ளியில் நடந்து வரும் ,தாய் தனிப் பயிற்சி வகுப்பில் பயின்று 10 ஆம் வகுப்பு ,11 ஆம் வகுப்புதேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு முத்தமிழ் அறக்கட்டளை ,நிலா சேவை மைய  அறக்கட்டளை சார்பாக பாராட்டு விழா நடைப் பெற்றது .பாராட்டி விருது வழங்கப் பட்டது .கவிஞர் இரா .இரவி தனது ஹைக்கூ ஆற்றுப்படை நூலை பரிசாக வழங்கி சிறப்புரை ஆற்றினார் .மணியம்மை தொடக்கப் பள்ளியின் தாளாளர் பி .வரதராசன் தலைமை வகித்தார் .முத்தமிழ் அறக்கட்டளை திருச்சி சந்தர்  முன்னிலை வகித்தார் .நிலா சேவை மைய  அறக்கட்டளை இரா .கணேசன் வரவேற்றார் . தாய் தனி பயிற்சி நிர்வாகி மோகன கண்ணன் நன்றி கூறினார் .பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் .

கருத்துகள்