உலகில் தமிழர் உள்ள வரை உன் பாடல் ஒலிக்கும் ! கவிஞர் இரா .இரவி

உலகில் தமிழர் உள்ள வரை உன் பாடல் ஒலிக்கும் !   கவிஞர் இரா .இரவி
சிறு கூடல் பட்டியில் பிறந்த கண்ணதாசனே !
பெரும் பாடல் புலவனே ! கவியரசனே !

எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்து
எட்டா  உயரம் இலக்கியத்தில் அடைந்தவனே !

கவிதை கதை கட்டுரை வடித்தவனே !
கற்கண்டு எழுத்தில் சகல கலா வல்லவனே
!

எந்த நாளும் எனக்கு அழிவில்லை என்றவனே !
எந்த நாளும் அழிவின்றி மக்கள் மனங்களில் நின்றவனே !

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
என்றவனே !
அந்த பறவை போலவே வாழ்ந்து காட்டியவனே !

அச்சம் என்பது மடமையடா
என்றவனே !
அச்சம் இன்றி துணிவுடன் வாழ்ந்தவனே !

ஆறடி நிலமே சொந்தமடா   என்றவனே !
அற்புத வாழ்வியல் தத்துவம் உரைத்தவனே !

உலகம் பிறந்தது எனக்காக என்றவனே !
உலகில் பிறந்து உணர்வில் கலந்தவனே !


வீடு வரை உறவு வீதி வரை மனைவி !
வாழ்வின் நிலையாமையை உணர்த்தியவனே !

ஆசையே அலை போல  என்றவனே !
ஆசையை அடக்க அறிவு
றுத்தியவனே  !
காலத்தைக்  கடந்து நின்றவனே !
காலத்தால் அழியாத பாடல் படைத்தவனே !

கல்வெட்டு வரிகளை மனங்களில் பதித்தவனே !
கவிஞன் என்ற சொல்லிற்கு பெருமை சேர்த்தவனே !

உலகம் உள்ளவரை உன் பெயர் நிலைக்கும் !
உலகில் தமிழர் உள்ள வரை உன் பாடல் ஒலிக்கும் !


--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

கருத்துகள்