காதல் கவிதைகள் கவிஞர் இரா .இரவி

காதல் கவிதைகள்                கவிஞர் இரா .இரவி

ஒரு ஆணுக்கு தன்னையும்
ஒரு பெண் காதலிக்கிறாள்
என்பதே பெருமை அருமை !
நவீன உடையை விட
சராசரி சேலையில்தான்
நடக்கும் சோலை
அவள் !

மாதா பிதா குரு நண்பன்
அனைவரையும் பின்னுக்குத் தள்ளி
முந்தினாள் அவள் !
பார்த்தால் பசி தீரும் என்பார்கள்
அவளைப் பார்த்தாலே
எனக்குப் பசி வருகின்றது !

சொர்க்கம் நரகம் நம்பாத
நாத்திகன் நான் !
அவளைச் சந்தித்ததும்
நம்பினேன் சொர்க்கத்தை !


அருகில் அவள் இல்லாவிட்டாலும்
என்னுள் இருக்கிறாள் !
எண்ணும் போதெல்லாம்
என் நினைவில் வருகின்றாள் !


முதலில் கண்கள் பேசியது
பிறகு இதழ்கள் பேசியது
பிறகு மனசு பேசியது
பேசிப் பேசி வளர்ந்த காதல்
பேசாமல் மனம் வாடியது !


காதல் வெற்றியை விட
காதல் தோல்விதான்
கவிதை வளர்க்கின்றது !
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!

கருத்துகள்