தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார் உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி

தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார்
உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி
தலைப்பு     நாமும் நம் மொழியும்
இடம் .மணியம்மையார் தொடக்கப் பள்ளி ,மதுரை
நாள் 10.6.2012
ஏற்பாடு .திரு .பி .வரதராசன் புரட்சிக் கவிஞர் மன்றம் 


நம் தமிழ் மொழியை  நீரில் நெருப்பில் இழந்தோம் .
புகை வண்டி ,தொடர் வண்டி ,மின் தொடர் வண்டி  தொடரி என்றனர் .சரியான
சொல்லாக அமைந்தது .


கல்வி என்பது நன்கு சுவற்றுக்குள் மட்டும் இல்லாமல் ஊரெல்லாம்  பரவ
வேண்டும் என்பதால் கல்லூரி என்று சொன்னார்கள்
அவரை ,துவரை ,சோளம் ,தினை .பனை ,கேழ்வரகு இவை எல்லாம் காரணத்துடன் அமைந்த
வேர்ச் சொற்கள் . .
பன்னீர் . பல துளிகள் சேர்ந்தது பன்னீர் என்றனர் .


மோடி  மஸ்தான் சாகிப் என்பவர் பல்கலைக் கழகத்தில் உருது மொழியைக் கொண்டு
 வந்தார் .பலரும் இது இயலாத செயல் என்றனர் .பத்து வருடங்களில் உருது
மொழியை முழுமையாகக் கொண்டு வந்துக் காட்டினார் .அந்த  உள்ளம் தமிழருக்கு
வேண்டும் .
குடி குடி கெடுக்கும் என்று எழுதி விட்டு குடியை கொடுக்கலாமா ?விற்கலாமா?
புகை பகை புற்று நோய் வரும் என்று எழுதி விட்டு தயாரிக்கலாமா? விற்கலாமா ?


நமது நாட்டில் சொல்லுக்கும் செயலுக்கும் ஒற்றுமை இல்லை .
பெரியார் பாராட்டிய பன்னீர் செல்வம் பற்றி இங்கே குறிப்பிட வேண்டும் .
அன்று திருவையாறு கல்லூரியில்  வடமொழி மட்டுமே கற்பித்தனர் .   5
மாணவர்களுக்கு 9 ஆசிரியர்கள் இருந்தார்கள் பணம்  செலவு செய்தனர் .சரபோஜி
மன்னர் நாட்டு மொழி கற்க செலவு செய்ய எழுதி வைத்துள்ளார் என்றார்கள்
.தமிழ் நாட்டில் தமிழ் தான் நாட்டு மொழி எனவே தமிழ் தான் கற்பிக்க
வேண்டும் என்று வாதாடினார் .திருவையாறு கல்லூரியை தமிழ்க்  கல்லூரியாக
மாற்றினார் .எங்கள் மொழியும் இருக்கட்டும்    என்று  வட மொழி கேட்டுப்
பெற்றனர் .அன்று பன்னீர் செல்வம் அவர்களுக்கு இருந்த தமிழ்ப் பற்று இன்று
தமிழருக்கு இல்லை .பேராசிரியர் இலக்குவனார் படித்த கல்லூரி  திருவையாறு
கல்லூரி.மொழிக்காக சிறை சென்ற பேராசிரியர் . நாட்கள் சிறை சென்றவர்
.மொழிப் போராளி .வேலை பறிப் போனது ,பேசக் கூ டாது ,வெளியே செல்லக்  கூ
டாது இப்படி பல துன்பங்களை  மொழிக்காக ஏற்றவர் .
கல்லூரியில் அய்யங்கார் கட்டு ,அய்யர் கட்டு ,சைவ கட்டு ,அரை சைவ  கட்டு,
அசைவ கட்டு என்று பிரிவுகளாக இருந்தது உணவு உண்ணும் இடம் .அதனை முதலில்
இரண்டு ஆக்கினார் .பின்னர் ஒன்றாக ஆக்கினார் .திரு பன்னீர் செல்வம் .


தமிழனுக்கு விழிப்புணர்வு வர வேண்டும் .தமிழன் கண்ணை மூடிக் கொண்டு
இருந்தால் கண்ணில் மண்ணைப் போட்டு க் கொண்டே இருப்பார்கள் .
 ஒருவர் விருந்து இடுகிறார் நான் இட்டப் பட்டு உண்கிறேன் .அதில் இருந்து
வந்த சொல் இட்டம் .நல்ல தமிழ் சொல்லில் ஸ் சேர்த்து இஷ்ட்டம் என்று ஆக்கி
வட சொல் ஆக்கி விட்டனர் .இப்படி பல சொற்கள் .
உயரம் குறைவாக இருப்பது குட்டை . ஷ் சேர்த்து குஷ்டம்  ஆக்கினார்கள் .
ஒரு செயல் செய்ய முடியாமல் கட்டுண்டு கிடப்பது கட்டம் ஷ் சேர்த்து
கஷ்டம்  ஆக்கினார்கள் .ஒரு எழுத்தை  மாற்றி நம் சொல்லையே திருடி விட்டனர்
.இப்படி திட்டமிட்டு தமிழைச் சிதைத்தனர் .




முடி வெட்டுதல் ,துணி வெட்டுதல் கலைச் சொற்கள் .காரணச் சொற்கள் .
புது மனை புகு விழாவின் போது ரிப்பன் வெட்டுதல் நம் பண்பாடு அன்று .
பிறந்த நாளிற்கு மென்மாவு (கேக் )  வெட்டுதல் நம் பண்பாடு அன்று .
எங்கே இருந்து  எந்தக் குப்பை வந்தாலும் கொட்ட குப்பைதொட்டி தேவை இல்லை
.தமிழ் நாடு இருக்கின்றது.


பெர்னாட்சாவை  பார்த்து ஒருவர் கேட்டார்."நீங்கள் இயற்கையை விரும்புபவர்
.நீங்கள் பேசும் மேடையில் பூக்கள் இல்லையே ".என்றார் .அதற்கு பெர்னாட்சா
சொன்னார் நான் இயற்கையை பூங்காவிற்கு சென்று ரசிப்பேன் .பூக்கள்பறித்து
வந்து மேடையில்வைக்க விரும்ப வில்லை .எனக்கு குழந்தைகளைப்  பிடிக்கும்
என்பதற்காக குழந்தையின் தலையை கொண்டு வந்து மேடையில் வைக்க வேண்டுமா ?


திரு .வி .க சொல்வார் .ஒவ்வொரு ஆண்களுக்குள்ளும்  பெண்மை இருக்க வேண்டும்
.அப்படி இருப்பவர்களுக்குதான் வீடு பேறு கிடைக்கும் ..
பெண்மை என்பது என்ன வென்றால் அன்பு,அருள்,பொறுமை ,அடக்கம் ,பண்பு
,ஒழுக்கம் ,தூய்மை ஆகும் .இப்படி பட்ட பெண்மை குணம் பெற்றவர்கள்தான்
புகழ் அடைந்தார்கள் புத்தர்,வள்ளலார் .


வெட்டுவதால் தான் வேட்டி என்றார்கள்  ஷ் சேர்த்து வேஷ்டி  ஆக்கினார்கள்
துண்டு போடுவதால் துண்டு என்றார்கள் .உலகில் வேறு எந்த மொழிக்கும்
இத்தகைய பெருமை இல்லவே இல்லை .ஒவ்வொரு சொல்லுக்கும் காரணம் உண்டு.


வேட்டைக்கும் போகிறவன் பறவை போல ஒலி கொடுப்பான  வேடம் போடுவான் .வேடம்
என்ற தமிழ்ச் சொல்லில்  ஷ சேர்த்து வேஷம்   ஆக்கினார்கள் .உயிரை விட
செய்வதால் விடம் என்றனர் ஷ என்ற ஒரு எழுத்தை சேர்த்து விஷம்
ஆக்கினார்கள்.ஒன்றோடு ஒன்று சேர்த்தல் சுவடி என்ற சொல்லை ஜோடி
ஆக்கினார்கள் ,பின் ஜோடனை,ஜோடிப்பு  ஆக்கினார்கள் .


நான் தாஜ்மகால் சென்றேன் .யாரும் தடுக்க வில்லை. காஷ்மீர்  சென்றேன்
.யாரும் தடுக்க வில்லை.ஆனால்  நாம் தானம் தந்த சேர நாட்டில் உள்ள கண்ணகி
கோயில் சென்றால் தடுக்கின்றனர் . குறிப்பிட்ட நாளில் மட்டுமே அனுமதி
.இதுவா ?ஒருமைப்பாடு .


உலகப் பொது மறையான திருக்குறள் வழியாகவே தமிழன் உலகம் முழுவதும் அறியப்
பட்டான்   .தமிழர்களின் அடையாளம்  திருக்குறள்.திருவள்ளுவருக்கு கோட்டம்
அமைத்தோம் ,சிலை வைத்தோம் ,கோயில் கூட கட்டினோம் .


ஆனால் திருவள்ளுவர் சொன்ன கருத்துக்களை கடைப்  பிடிக்க மறந்தோம்  .
பரிசுச் சீட்டு நடத்தினோம் .மதுக் கடைகள்  திறந்தோம் .
திருக்குறள் வழி நடந்தால் தமிழும் ,தமிழரும் செழித்து வாழலாம்
.தமிழர்க்கு இனியாவது விழிப்புணர்வும் ,தமிழ்ப் பற்றும் வர வேண்டும் .



--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

 கண் தானம் செய்வோம் !!!!!

கருத்துகள்