ஈடு இணையற்ற ஒரே உறவு அம்மா ! கவிஞர் இரா .இரவி

ஈடு இணையற்ற ஒரே உறவு அம்மா !              கவிஞர் இரா .இரவி

எத்தனையோ உறவுகள் உலகில் இருந்தாலும்
ஈடு இணையற்ற ஒரே உறவு அம்மா !

இந்த உலகை நமக்கு அறிமுகம் செய்த
அழகு முகம்
என்றும் குழந்தைக்கு மறக்காத  முகம் அம்மா !

உயிரெழுத்தில் தொடங்கி  மெய்யெழுத்தில்
மையமாகி  
உயிர்மெய்யில் முடியும் உன்னதம் 
அம்மா !

குழந்தைக்கு உயிரும் மெய்யும் தந்த
குவலயத்தில் சிறந்த  உறவு 
அம்மா !

கருவிலேயே குழந்தைக்கு திரு வழங்கிய
கருணைக் கடல் ஒப்பற்ற 
அம்மா !

தாய்மொழியை  சேயுக்கு கருவிலேயே
தன் வயிற்றிலேயே பயிற்றுவி
த்தவள்  அம்மா !

தன் இதயத் துடிப்பின் மூலம் கருவிலேயே குழந்தைக்கு
தனது முதல் தாலாட்டைத் தொடங்கியவள் அம்மா !  

குழந்தை பிறந்து பின் அழ நேர்ந்தால் மார்போடு அணைத்து 
தன் இதயத் துடிப்பை உணர்த்தி அழுகை நிறுத்திய அம்மா !

குருதியைப்    பாலாக்கி வழங்கி பெற்றக்
குழந்தையின் உயிர் வளர்த்தவள்
அம்மா !

தன் துன்பம் பொறுப்பாள் அவள் ஆனால்
தன் குழந்தையின் துன்பம் பொறுக்காதவள் 
அம்மா !

தன்னைத் தேய்த்து தன் குழந்தை வாழ்வை
தரணியில் மணக்க வைக்கும் சந்தனம்  
அம்மா !

தன்னை உருக்கி தன் குழந்தையின்  வாழ்வை
தரணியில் ஒளிர வைக்கும்  மெழுகு 
அம்மா !

தான் சுமந்து தன் குழந்தையை வாழ்வில்
தவிக்காமல் கரை சேர்த்தத் தோணி
அம்மா !

தான் உயராவிட்டாலும் தன் குழந்தையை
தரணியில் உயர வைக்கும் ஏணி  அம்மா !

உலகில் யாரை  மறந்தாலும் நீங்கள்
ஒருபோதும் ஒப்பற்ற
அம்மாவை மறக்காதீர்கள் !
--

கருத்துகள்