உழைப்பாளர் தினம் ! கவிஞர் இரா .இரவி

உழைப்பாளர் தினம் !                   கவிஞர் இரா .இரவி

வருடத்தில் ஒரு நாளாவது உழைக்கும் உழைப்பாளிகளை
உலகம்  நினைத்துப் பார்ப்பதற்கு நன்றி !

தினம் தினம் உழைக்கும் உழைப்பாளிகளை
உழைப்பாளர் தினத்திலாவது நினைத்து மகிழ்வோம் !

உலகம் உருவானதும் உயர்வானதும் 
உழைப்பாளிகளின் ஒப்பற்ற உயர்ந்த உழைப்பால் !

பாலங்கள் கட்டியதும் அணைகள் கட்டியதும்
வாகனங்கள் செய்ததும் சாலைகள் போட்டதும்

உழைப்பாளிகள் ! உழைப்பாளிகள் ! உழைப்பாளிகள்  !
உழைப்பாளிகள் உழைப்பு மதிக்கப் பட வேண்டும் !


உண்ண உணவு வழங்கியவர்கள் உழைப்பாளிகள் !
உடுக்க உடை உருவாக்கியவர்கள் உழைப்பாளிகள்  !

வசிக்க வீடு கட்டியவர்கள் 
உழைப்பாளிகள்  !
வளமான வாழ்விற்குக் காரணம் 
உழைப்பாளிகள்  !
 
உழைப்பாளிகள்   இல்லை என்றால் நீயும் இல்லை நானும் இல்லை
உழைப்பாளிகள்   இல்லை என்றால் ஊரும் இல்லை உறவும் இல்லை !

உழைப்பாளிகள்   இல்லை என்றால் உலகம் இல்லை
உழைப்பாளிகள்   இல்லை என்றால் வாழ்க்கை இல்லை !

உடலின் வியர்வை நிலத்தில் சிந்தி
உலகின் உயர்வை உருவாக்கிய சிற்பிகள் 
!
ஓய்வை  ஒத்தி வைத்து விட்டு நாளும்
உழைப்பை ஓய்வின்றி நல்கியவர்கள் !  


உழைப்பாளிகள் வாழ்க்கையில் உயரவில்லை
உழைக்காதவன்
வாழ்க்கையில் உயர்ந்து விடுகின்றான் !

உடல் உழைப்பு மட்டம் என்பது மடமை
மூளை உழைப்பு மட்டுமே  உயர்வு என்பதும் மடமை !

உழைப்பாளிகள் உள்ளம்  மகிழ்ந்து இருக்க  வேண்டும்
உள்ளதை
உழைப்பாளிகளுக்கு பகிர்ந்திட வேண்டும் !

உழைப்பாளிகள் மதிக்கப் பட வேண்டும்
உழைப்பினை உலகம் போற்றிட வேண்டும் !

--

கருத்துகள்

  1. பெயரில்லா1 மே, 2012 அன்று AM 8:34

    அருமையான கவிதை ! உழைப்பாளிக்கான அங்கீகாரம் தங்களின் கருத்தான கவிதை!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக