படித்ததில் பிடித்தது ! மாணவர்கள் எழுதிய ஹைக்கூ

படித்ததில் பிடித்தது ! மாணவர்கள் எழுதிய ஹைக்கூ

ஹைக்கூ         
பி.இராஜேஷ் குமார்

வெளியே காவி!
உள்ளே பாவி!
போலிச்சாமியார்!

 
எமனைச் சந்திக்க
ஒருவருக்கொருவர் போட்டி!
சாலை விபத்து!
 
ஊதியமின்றி வேலைக்காரி!
ஒவ்வொரு வீட்டிலும்
பெண்ணடிமை!
 
பெற்று வளர்த்தவர்க்கு
மகனின் அன்புப்பரிசு
முதியோர் இல்லம்!
 
இவனுக்கு வருமானம்!
நாட்டிற்கு அவமானம்!
பிச்சைக்காரன்!
-----------        ----------------------------------------------------
 ஹைக்கூ    மு.அருண்கிருஷ்ணா

மாளிகையில் அமர்ந்து வாங்கும்
மாறுபட்ட பிச்சை!
இலஞ்சம்!
 
புத்தகம் ஏந்தவேண்டிய கை
பட்டாசு சுற்றியது!
குழந்தைத் தொழிலாளி!
 
பலகோடி மரங்களின்
கல்லறைப்பூக்கள்
காகிதம்!
 
வார்த்தை மறைந்தது!
வாங்குவது மறையவில்லை!
வரதட்சணை!       

--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

கருத்துகள்