மதுரை உயர் நீதி மன்றத்தில் உள்ள பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தில் கவிஞர் சி . அன்னக்கொடியின் நூல்கள் அறிமுக விழா நடைப்பெற்றது .

மதுரை  உயர்   நீதி மன்றத்தில் உள்ள பெண் வழக்கறிஞர்கள்  சங்கத்தில் கவிஞர் சி . அன்னக்கொடியின் நூல்கள் அறிமுக விழா நடைப்பெற்றது .

  வழக்கறிஞர் சி .அன்னக்கொடி அவர்களின் நூல்கள் அறிமுக விழா மதுரை உயர் நீதி மன்றத்தின் பெண்கள் வழக்கறிஞர் சங்கத்தின் அன்னா சாண்டி அரங்கத்தில் நடைப்பெற்றது . பெண்கள் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் திருமதி .ஜெ.நிஷாபானு தலைமை வகித்தார் .செயலர் செல்வி னந்தவள்ளி  வரவேற்றார் . மதுரை உயர் நீதி மன்றத்தின்  வழக்கறிஞர் சங்கத்தின் செயலர் கு .சாமிதுரை அவர்களும் ,வழக்கறிஞர் திருமதி மீரா கற்பகம் அவர்களும் நூல்கள்  பற்றிய ஆய்வுரையை வழங்கினார்கள் .மதுரை  உயர் நீதி மன்றத்தின் நீதிபதி G.M அக்பர்அலி நூல்களை அறிமுகப்படுத்தி சிறப்புரையாற்றினார் .நூல்களின் ஆசிரியர் வழக்கறிஞர் சி அன்னக்கொடி அவர்களுக்கு  சமுதாயக் கவிஞர் என்று பட்டம் வழங்கலாம் .என்று குறிப்பிட்டார்கள் .சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்ட கவிஞர் இரா இரவிக்கு, நீதிபதி G.M. அக்பர் அலி  அவர்கள் பொன்னாடைப் போர்த்திப் பாராட்டினார்கள் . நூல்களின் ஆசிரியர் வழக்கறிஞர் சி அன்னக்கொடி ஏற்புரைக்குப் பின் வழக்கறிஞர் திருமதி .ஜெயா இந்திரா படேல் நன்றி கூறினார் ,விழாவிற்கு நூல்களின் ஆசிரியர் வழக்கறிஞர் சி. அன்னக்கொடி குடும்பத்தினர் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் கலை இலக்கியப் பெரு மன்றத்தின் பொறுப்பாளர்கள் பலரும் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்   --

கருத்துகள்