மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் சார்பில் தன் முன்னேற்றப் பயிலரங்கம்

மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் சார்பில் தன் முன்னேற்றப் பயிலரங்கம் சிபி பயிற்சிக் கல்லூரியில் நடைப்பெற்றது .வாசகர் வட்டத்தின் செயலர் கவிஞர் இரா .இரவி தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் திருச்சி சந்தர் முன்னிலை வகித்தார் .திரு .ஜோதி மகாலிங்கம் , 
திருஆ .முத்துக்கிருஷ்ணன்,   திரு.G.ராமமூர்த்தி ,திரு.ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். கவிஞர்கள் இரா .கல்யாண சுந்தரம் ,
K.விஸ்வநாதன்ஜனசிந்தன் ,இரா .கணேசன் ,பொன் .சிவ முருகன் ,கலை இனியன், தமிழ் இனியன் ஆகியோர் தன்னம்பிக்கை தொடர்பான கவிதைகள் வாசித்தனர் .தன்னம்பிக்கை பயிற்சியாளர் ,அடுத்த ஆயிரம் நாட்கள் நூல் ஆசிரியர் .வைகை திரு. ஆ. விஸ்வநாதன்  மற்றவர் நிலையில் தான் என்ற உணர்வு என்ற தலைப்பில் தன் முன்னேற்றப் பயிற்சி அளித்தார் .சூழ்நிலையை புரிந்துக் கொள்ளுதல் ,யார் வெல்வது என்பதை விட யார் தோற்கக் கூடாது  என்பது முக்கியம் .தோல்வியைத் தாங்கும் மன நிலை இல்லாதவர்களுக்கு சிறிது விட்டுக் கொடுத்து உதவுதல் .ம.நி.த வேண்டும் .அதாவது, மனிதாபிமானம் ,நிறைவு ,தன்மை .அடுத்தவர் பலகீனமாக இருக்கும்போது அவர் நிலையில் இருந்து யோசித்து உதவுதல் .இப்படி பல தகவல்கள் தந்தார் . வளம் அறக்கட்டளை  ரெ.கார்த்திகேயன்,சரவணன், பாண்டியன்  உள்பட ,மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தினர் பலர்  கலந்துக் கொண்டு விழாவைச் சிறப்பித்தனர் .தினேஷ் நன்றி கூறினார் .விழாவிற்கான ஏற்பாட்டை வாசகர் வட்டத்தின் தலைவர் எ .எஸ் .ராஜராஜன் செய்து இருந்தார் .

கருத்துகள்