மண்ணில் பிறந்தது சாதிப்பதற்குத்தான் கவிஞர் இரா .இரவி

மண்ணில் பிறந்தது சாதிப்பதற்குத்தான்            கவிஞர் இரா .இரவி
  

இமயம் தொட முடியாது என்றார்கள்
இமயம் தொட்டு வந்தான் சாதனையாளன் !

நிலவிற்கு  செல்ல முடியாது என்றார்கள்
நிலவிற்கு சென்று வந்தான் சாதனையாளன் !
ஆழ்கடலில்  நீந்த முடியாது என்றார்கள் ஆழ்கடலில்  நீந்தி வந்தான் சாதனையாளன் !

மனிதன் பறக்க முடியாது என்றார்கள்
மனிதன் பறந்தான் விமானத்தில்
!

முடியாது என்பது மூடத்தனம்
முடியும் என்பதே மூலதனம்
!

முடியாது என்பதை முடித்துக் காட்டு
மண்ணில் நீயே எடுத்துக்காட்டு !

நடக்காது என்பது அவ நம்பிக்கை
நடக்கும் என்பதே தன்னம்பிக்கை
!

கிடைக்காது என்பது கோழைத்தனம்
கிடைக்கும் என்பதே நல்ல குணம் !
 
காலம் பொன் போன்றது அல்ல அல்ல
காலம் பொன்னை விட மேலானது
!

பொன்னை வாங்கலாம் பணத்தால்
காலத்தை வாங்க இயலாது பணத்தால்
!

ஒவ்வொரு நிமிடத்தையும் பயன்படுத்து
ஒரு நிமிடத்தைக்
கூட வீணாக்காதே !

வாய்ப்பு வருமென்று காத்திருக்காதே
வாய்ப்பை உடன் நீயே உருவாக்கு
!

உந்தன் முதல் எதிரி சோம்பேறித்தனம்
உன்னிடமிருந்து  விரட்டிவிடு அவனை !

உந்தன் நல்ல நண்பன் சுறுசுறுப்பு
உன்னிடமே வைத்திடு அவனை
!

நாளை என்று நாளைக் கடத்தாதே
இன்றே என்றே இனிதே முடித்திடு
!

முயற்சி மூச்சென எப்போதும் இருக்கட்டும் 
தளர்ச்சி தள்ளியே எப்போதும் இருக்கட்டும்   

வெற்றியை நீ தேடிச் செல்ல வேண்டாம்
வெற்றி உனைத் தேடி வாசல்  சேரும்

மண்ணில் பிறந்தது வாழ்வதற்கு மட்டுமல்ல
மண்ணில் பிறந்தது சாதிப்பதற்கு
த்தான் 



--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

கருத்துகள்