ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

ஹைக்கூ                  கவிஞர் இரா .இரவி

மழையில் நனைந்தும்
வண்ணம் மாறவில்லை
வண்ணத்துப்பூச்சி !

தீயால் சுட்டபோதும்
வண்ணம் மாறவில்லை
வெண்சங்கு !

தீக்காயம் பட்டபோதும்
நல்கியது இனிய இசை
புல்லாங்குழல் !

பயணத்தில்
வரிசை மாறவில்லை
எறும்பு !


சுமையை சுமையாகக்  கருதவில்லை
நண்டு !

பசித்தபோதும்
உண்ணவில்லை புல்
புலி ! 
ஏமாற்றிக் கரந்தபோதும்
பால் தந்தது
பசு !

உழுது உதவியது
உழவனுக்கு
மண் புழு !

 
அடித்தப்போதும் 
குரைத்து உதவியது
நாய் !


வெட்டியப்போதும்
கறியானது
ஆடு !

வலையில் சிக்கியும்
உணவானது
மீன் !


--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

கருத்துகள்