லிபுன் கவிஞர் இரா .இரவி

லிபுன்  கவிஞர் இரா .இரவி

முல்லைப் பெரியாறு அணை கட்டிய
பென்னிகுக் தமிழகத்தில் நிலவிய பசி, பட்டினி, பஞ்சம் கண்டு வருந்தினார் .இதனைப் போக்கிட என்ன? வழி என்று யோசித்தார் .அணையைக் கட்டி, நீரைத் தேக்கி, விவசாயம் பெருக்குவதே தீர்வு என்று தீர்மானம் செய்து ,தடைகள் பல வந்த போதும் தகர்த்து ,சொந்த சொத்துக்களை விற்று ,பிறப்பது ஒரு முறைதான் .இனி ஒரு முறை பிறக்கப்  போவது  இல்லை .இந்தப் பிறப்பில் அரிய சாதனை நிகழ்த்தி விட்டுத்தான் இறப்பேன் .என்று  ஆயிரம் ஆண்டுகள் ஆயுள் கொண்ட அற்புத அணையை கட்டி விட்டு மறைந்தபோதும் .இன்றும் மக்கள் மனங்களில் வாழ்கின்றார் .

மண்ணில் பிறப்பு ஒருமுறை
அரிய சாதனைகள் செய்து வாழ்ந்திடுவோம்
நம்மை வாழ்த்தட்டும் தலைமுறை 

கருத்துகள்