மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் சார்பில் தன் முன்னேற்றப் பயிலரங்கம் நடைப்பெற்றது

மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் சார்பில் தன் முன்னேற்றப்
பயிலரங்கம் நடைப்பெற்றது .*
*
மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் சார்பில் தன் முன்னேற்றப்
பயிலரங்கம் நடைப்பெற்றது . **வாசகர் **வட்டத்தின்** செயலர், கவிஞர் இரா ,இரவி
தலைமை வகித்தார் .திரு தினேஷ் முன்னிலை வகித்தார் .கவிஞர்கள் யமுனா ரகுபதி
,பிரபாகரன் ,சிவா முருகன் ஆகியோர்  தன்னம்பிக்கை தொடர்பான கவிதை படித்தனர்
.திரு .ராமமூர்த்தி ,திரு பீட்டர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் .மதுரை
விரகனூர் வேலம்மாள் மெட்ரிக் பள்ளி ஆசிரியர் கவிஞர் கா .கண்ணதாசன்  சிறகை விரி
! வானம் வசப்படும் !    என்ற தலைப்பில் தன் முன்னேற்றப் பயிற்சி அளித்தார்
.ஜோதிடம் பார்க்கப் பயன்படும் கிளி ,சிறகு இருந்தும் பறக்காமல் கிடைத்த நெல்
மணியோடு திருப்திப் பட்டு இருந்து விடுகின்றது. கிளியைப் போலவே சில
மனிதர்களும் இருந்து விடுகின்றனர் .முயற்சியால் வெற்றிப் பெற்ற அறிஞர்களின்
வரலாறு கூறி,  மிகச் சிறப்பாக பயிற்சித் தந்தைமைக்காக ,எல்லோரும் எழுந்து
நின்று கர ஒலி தந்து பாராட்டினார்கள் . மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தினர்
பலரும் கலந்து கொண்டு  விழாவை சிறப்பித்தனர் .விழாவிற்கான ஏற்பாட்டை வாசகர்
வட்டத்தின் தலைவர் ராஜராஜன் ,ஒருங்கிணைப்பாளர் திருச்சி சந்தர் இருவரும்
செய்து இருந்தனர் . *

கருத்துகள்