ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

ஹைக்கூ                            கவிஞர் இரா .இரவி



பறவைகளின் எச்சம்
மரங்கலானது மிச்சம்
இயற்கையின் உச்சம் !

அமர்வதும் அழகு
பறப்பதும் அழகு
பட்டாம்
பூச்சி !

உணரந்தவர்கள் மட்டும்
உணரும் உன்னது உணர்வு
காதல் !
பொன்முட்டை வாத்து
அறுத்த கதையாக
மரம் வெட்டி விறகு !

விலங்கை முறி
சிறகை விரி
இளம் விதவை !


அழுவதில்லை   
சிறைபடுத்தப்பட்டும்
தொட்டி மீன்கள் !

பயமுறுத்தியது
கர்ஜனை
சிங்கம் !

தேவையில்லை
தண்ணீர்
செயற்கைச் செடிகள் 
!

ஏமாளித் தொண்டன்
கோமாளித் தலைவன்
அரசியல் !

சுதந்திர இந்தியாவில்
சுதந்திரக் கொள்ளை
அரசியல் !

ரணமானது மனசு
புயல் நிவாரணத்திலும்
கையூட்டு
!
   
அப்போது எப்போது என்பது தெரிந்து
இப்போது 
எப்போது என்பது தெரியாது
தொடரும் மின் தடை !


கருத்துகள்