தன் முன்னேற்றப் பயிலரங்கமும் ,தமிழர் திருநாள் பொங்கல் விழாவும் நடைப்பெற்றது

மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டம் சார்பில் 15.1.2012 இன்று  தன் முன்னேற்றப்   பயிலரங்கமும் ,தமிழர் திருநாள் பொங்கல் விழாவும் நடைப்பெற்றது .வாசகர் வட்டத்தின் தலைவர் எ .எஸ் .ராஜராஜன் வரவேற்றார். வாசகர் வட்டத்தின் செயலர் கவிஞர் இரா .இரவி தலைமை வகித்தார் ,ஒருங்கிணைப்பாளர் திருச்சி சந்தர் முன்னிலை வகித்தார் .திரு .பேனா மனோகரன் D.S.P. (ஒய்வு )திரு .முத்துக் கிருஷ்ணன் ,   திரு.ராமமூர்த்தி, வழக்குரைஞர் திரு .கணேசன்    ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் .கவிஞர்கள் இரா .கல்யாண சுந்தரம், இரா. கணேசன் தன்னம்பிக்கை தலைப்பில் கவிதை வாசித்தனர் .தொலைக் காட்சிப் புகழ் திருச்சி திரு .கமலா ராமநாதன் ஏணிப்படி  ஏன் ? இப்படி என்ற தலைப்பில் தன் முன்னேற்றப் பயிற்சி அளித்தார் .மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டதினர் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

கருத்துகள்