மதுரை கேப்ரங்கால் மகளிர் மேனிலைப் பள்ளியில் நடைப் பெற்றது. பள்ளியின் தேசிய மாணவிகள் படையின் மரியாதை அணிவகுப்பு நடந்தது .

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில்மேனிலை ப் பள்ளி மாணவர்களுக்கான கவிதை கட்டுரை பேச்சுப்போட்டிகள்  நடந்தது

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில்   மேனிலை ப் பள்ளி மாணவர்களுக்கான கவிதை கட்டுரை பேச்சுப்போட்டிகள் நடந்தது. வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கி பாராட்டும் விழா மதுரை கேப்ரங்கால் மகளிர் மேனிலைப்  பள்ளியில் நடைப் பெற்றது. பள்ளியின் தேசிய மாணவிகள் படையின் மரியாதை அணிவகுப்பு நடந்தது .

தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் முனைவர் க .பசும்பொன் வரவேற்றார் .பள்ளியின் தாளாளர் திரு .மார்த்தாண்டன் தாமஸ், உதவி சுற்றுலா அலுவலர் கவிஞர் இரா.இரவி,கவிஞர் பாண்டுரங்கன் ,புலவர் ஆறுமுகம் எழுத்தாளர் கர்ணன், கனல்பூக்கள்   ஆசிரியர் கவிஞர் சாந்தி  ஆகியோர்  வாழ்த்துரை வழங்கினார்கள். முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் சு .நாகராச முருகன்  வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கி,சிறப்புரையாற்றினார் .மூன்று போட்டிகளுக்கும் தலா   முதல் பரிசு ரூபாய் 10000 இரண்டாம் பரிசு ரூபாய் 7000
  பள்ளியின் தலைமை ஆசிரியர் லீலா மனோகரி நன்றி கூறினார்.

 முடிந்த அளவிற்கு ஆங்கிலச் சொல் கலப்பின்றி நல்ல தமிழில் பேசுங்கள் .மம்மி டாடி என்று அழைப்பதை விடுத்து  அம்மா ,அப்பா என்று அழையுங்கள் ,தொலைக் காட்சித் தொடர்களைப் பார்க்காதீர்கள் போன்ற வேண்டுகோள் மாணவ, மாணவியரிடம் விடுக்கப்  பட்டது .

 

கருத்துகள்