தாகூர் கவிஞர் இரா .இரவி

தாகூர் கவிஞர் இரா .இரவி
மறுமலர்ச்சி நாயகர் 
அரசியலை வெறுத்தவர் 
தாகூர் 

கவிஞர்களின் கவிஞர் 
எழுத்தாளர்களின் எழுத்தாளர் 
தாகூர் 

கல்வியில் சீர்திருத்தம் 
செயல்படுத்திக் காட்டியவர் 
தாகூர் 

நரபலியைச் சாடி 
கவிதை கதை வடித்தவர் 
தாகூர் 

ஓவியமாக கவிதையும் 
கவிதையாக ஓவியமும் படைத்தவர் 
தாகூர் 

உன்னை நீ அறிவாய் 
உலகிற்கு உணர்த்தியவர் 
தாகூர் 

விளக்குகளை ஏற்றும் 
ஆசிரிய விளக்கு 
தாகூர் 

தேசிய கீதங்கள் இயற்றியவர் 
தேசியக் கவியாகத் திகழ்ந்தவர் 
தாகூர் 

பதினான்காவதாகப் பிறந்து 
பார் போற்றும் கவிறானவர் 
தாகூர் 

மாதிரிப் பள்ளி தொடங்கி
முன் மாதிரியானவர் 
 தாகூர் 

இந்திய வரலாறு எழுதி 
உலக வரலாறு ஆனவர் 
 தாகூர் 

யுகங்கள் கடந்து வாழும் 
யுகம் வென்ற கவி 
 தாகூர் 
  

கருத்துகள்