மதுரை உயர் நீதி மன்றத்தில் கவிஞர் இரா .இரவி யின் சுட்டும் விழி நூல் அறிமுக விழா

மதுரை உயர் நீதி மன்றத்தில் கவிஞர் இரா .இரவி யின் சுட்டும் விழி நூல் அறிமுக விழா

மதுரை உயர் நீதி மன்றத்தில் ,மகளீர் வழக்கறிஞர்கள் சங்கத்தில் ,
சுட்டும் விழி நூல் அறிமுக விழா நடைப்பெற்றது .சங்கத்தின் தலைவிJ. நிஷா
பானு வரவேற்றார் .நீதியரசர் K.N.பாஷா சுட்டும் விழி நூல் அறிமுகம்
செய்து தனக்குப் பிடித்த ஹைக்கூ கவிதைகளை மேற்கோள் காட்டி விமர்சன
உரையாற்றினார் .நீதியரசர் பாஷா நினைவுப்பரிசினை நூல் ஆசிரியர் கவிஞர்
இரா .இரவிக்கு வழங்கிப் பாராட்டினார் .

சிரிப்பும் சிந்தனையும் என்ற தலைப்பில் தொலைக் காட்சிப் புகழ் விளாங்குடி
விநாயக மூர்த்தி உரையாற்றினார் .
நீதியரசர் V.ராம சுப்ரமணியன் சுட்டும் விழி நூலைப் பெற்றுக் கொண்டு ,எது
தரமான நகைச் சுவை என்று விளக்க உரையாற்றினார் .

விழாவிற்கான ஏற்பாட்டை வழக்கறிஞர் கு .சாமிதுரை செய்தார் .மதுரை உயர்
நீதி மன்ற வழக்கறிஞர்கள் இரு பாலரும் பெருமளவில் கலந்து கொண்டு விழாவை
சிறப்பித்தனர் . மகளீர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் செயலர் J. ஆனந்தவள்ளி
நன்றி கூறினார்

கருத்துகள்