வேண்டாம் கூடங்குளத்தில் அணு உலை வேண்டாம் கவிஞர் இரா .இரவி

வேண்டாம் கூடங்குளத்தில் அணு உலை வேண்டாம்  கவிஞர் இரா .இரவி

 அணு உலையை  அன்றில் இருந்தே சில உண்மையான மனிதாபிமானிகள் எதிர்த்து
வந்துள்ளனர் .இன்று மக்களுக்கு விழிப்புணர்வு வந்துள்ளது .எம் மக்கள்
உயிரைப் பணயம் வைத்தி அணு உலையில் மின்சாரம் எடுத்து கொலைகாரப் பாவி
ராஜபட்ஜெக்கு கொடுப்பீர்கள் .கொலைகார சிங்களர்களை  இந்தியாவின் செலவில்
இந்தியாவை சுற்றிக் காட்டுவீர்கள் .தமிழன் வாய் பொத்தி வேடிக்கைப்
பார்க்க வேண்டுமா ? அணு உலை வெடிக்க வேண்டாம் .அணு உலைக் குப்பை போதும்
தமிழ்நாட்டை அழித்து விடும் .தமிழினம் இப்போது விழித்து விட்டது.இனி
ஏமாற்று வேலை நடக்காது .பல கோடி செலவாகி விட்டதே இப்போது மூடச்
சொல்கிறார்களே என புலம்பும் கூட்டத்திடம் ஒரு கேள்வி? உங்க அப்பன் வீட்டு
பணமா ?அரசாங்கப் பணம்தானே போகட்டும் .பணம் போனால் திரும்ப கிடைக்கும்
.உயிர்கள் போனால் திரும்ப கிடைக்காது அரசியல்வாதிகள் கோடி கோடியாகக்
கொள்ளை அடிக்கிறார்களே அவர்களை என்ன செய்து விட்டீர்கள்  .

பல கோடி செலவழித்து சேது சமுத்திரம் திட்டம் வேலை நடைபெற்றதே .அப்போது
சில விசமிகள் கற்பனையாக ராமன் பாலம் என்று போய் சொல்லி அந்தத் திட்டத்தை
பாதியிலேயே நிறுத்திய போது .இப்போது கூடங்குளத்தில் அணு உலை மூடினால்
கோடிகள் நட்டம் என்று சொல்லும்  கூட்டம்அன்று மட்டும் அமைதியாக இருந்ததே
ஏன் ?

அணு உலை கழிவு    வருங்கால சந்ததிகளை பாதிக்கும் என்று வல்லுனர்கள்
எச்சரிக்கிறார்கள்.அணு உலை வேண்டும என்பவர்கள் அணு உலை அருகே வசிக்க
சம்மதமா ?மின்சாரம் இல்லை கிடைக்காது என்று கூ ச்சல்   இடுபவர்கள்
மின்சாரம் எடுக்க பல வழி  உண்டு அறிந்து கொள்ளுங்கள் .

அயல் நாடுகளில் சோலார் மூலம் மின்சாரம் வீடுகளில் எடுத்து அரசுக்கு
விற்பனை செய்கிறார்கள் .கோடிகளை சோலார் திட்டத்திற்கு செலவிடுங்கள் .வணிக
நிறுவனங்களில் விளம்பரத்திற்காக  விரயம் செய்வதை  நிறுத்துங்கள் .கேரளா
போல குண்டு    பல்பை அகற்றுங்கள் .
உங்களது ஆடம்பதிற்காக தமிழகத்தின் தென் மாநில மக்களின் உயிரை பணயம் வைக்க வேண்டுமா?

அணு உலையால்  பாதித்தால் நட்ட ஈடு கேட்டு வழக்கு போட முடியாது தெரியுமா
?உங்களுக்கு அப்படி ஒரு ஒப்பந்தம் போட்டு உள்ளனர் .நமது அரசியல்வாதிகள்
.போபால் விச வாய்வு  தாக்கி எத்தனை  பேர் மாண்டார்கள்   எத்தனை பேர் கை
,கால் இழந்தார்கள். எத்தனை குடும்பம்  அனாதை ஆனது .அவர்களுக்கு நட்ட ஈடு
இன்று வரை முறையாப் போய் சேரவில்லை .ஆனால் அந்த  நிறுவனத்தின்  அதிபதி
,கொலைகாரனை பாதுகாப்பாக தனி விமானத்தில் தப்ப விட்டவர்கள் நம் நாட்டு
அரசியல்வாதிகள் .

விலங்குகளுக்கு இல்லை பகுத்தறிவு ஆனால் மனிதனுக்கு பகுத்தறிவு உண்டு
அதனைப்  பயன்படுத்தி  எதையும்  ஏன் ?எதற்கு ?எப்படி ?என்று  யோசித்துப்
பாரக்க வேண்டும அவரே சொல்லி விட்டார் .இவரே சொல்லி விட்டார். என்பதற்காக
நம்பத் தேவை இல்லை .சொல்வது யார்? என்பது முக்கியம் அல்ல
என்ன ? சொல்கிறார் என்பதே முக்கியம் .நான் மதிக்கும் மிகச் சிறந்த மனிதர்
அப்துல் கலாம் ஆனால் அவரே சொல்லி விட்டார் என்பதற்காக அப்படியே  ஏற்க
வேண்டும என்று  அவசியம் இல்லை  நம் பகுத்தறிவு கொண்டு  சிந்தித்துப்
பார்க்க வேண்டும .நல்லது  கேட்டது ஆராய வேண்டும.

 போபால் விச வாய்வு விபத்துப்போல கூடங்குளத்தில் அணு உலைவிபத்து நடந்தால்
யார் பொறுப்பு ?அணு உலை தடை  செய்ப்பட்ட கனடாவில் பாதுக்காப்பாக வாழ்ந்து
கொண்டு , கூடங்குளத்தில்அணு உலை வேண்டும என்று  சொல்பவர் பொறுப்பு ஆவாரா
? நட்ட ஈடு தருவாரா ?இழந்த உயிர்களை திருப்பி தர முடியுமா ?

அணு உலை வேண்டாம் என்பவர்கள் மனிதாபிமானிகள்

அணு உலை வேண்டும என்பவர்கள் மனிதாபிமான மற்றவர்கள்

-
 

கருத்துகள்