பண்பாளர் தந்தை பெரியார் . கவிஞர் இரா .இரவி

பண்பாளர் தந்தை பெரியார் .  கவிஞர் இரா .இரவி

 5.10.1823 இன்று வாடிய பயிரைக் கண்டப் பொழுதெல்லாம் வாடினேன். என்று சொன்ன வள்ளலார்   பிறந்த நாள் .பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் 
வள்ளலார் நினைவிடத்திற்கு உள்ளே சென்றார் .குறிப்பிட்ட தூரம் வரை சென்ற பெரியார் நின்று விட்டார் .ஏன்? என்று கேட்டார்கள்  .புலால் உண்பவர்களை இந்த எல்லையைத் தாண்டி வர வேண்டாம் என்று எழுதி இருந்தது .எனக்கு புலால் உண்ணும் பழக்கம் உண்டு .எனவே நான் இந்த எல்லையைத் தாண்டி வர விருப்பம் இல்லை என்றார் .அதற்கு  உடன் இருந்தவர்கள் இந்த அறிவிப்பு உங்களைக் கட்டுப் படுத்தாது நீங்கள் வரலாம் என்றார்கள் .ஆனால் பெரியார் மறுத்து விட்டார் .ஒரு எடதிர்க்கு வந்தால் அந்த இடத்தின் சட்ட திட்டத்தை மதிக்க வேண்டும் .நான் மீறினால் மற்றவர்களும் மீறுவார்கள் எண்டு சொலி வர மறுத்த பண்பாளர் தந்தை பெரியார் . 


மறைந்த மாமேதை குன்றக்குடி அடிகளார் தந்தை பெரியார் இல்லத்திற்கு   வந்து இருந்தார் .இருவருக்கும் இடையே தூய நட்பு உண்டு . குன்றக்குடி அடிகளார் குளித்துவிட்டு   வந்தவுடன் தந்தை பெரியார்  திருநீர் கொண்டு   வந்து   கொடுத்தார்   ,இதைப் பார்த்து அதிர்ந்து போன
குன்றக்குடி அடிகளார்  நீங்கள் நாத்திகர் நீங்கள் எனக்கு திருநீர் கொண்டு   வந்து கொடுக்கிறீர்களே என்று கேட்டார் .அதற்கு தந்தை பெரியார்  சொன்னார் என்னுடைய   கொள்கை நாத்திகம்தான். அது வேறு .பண்பாடு வேறு .இன்று நீங்கள் என்னுடைய விருந்தாளி வந்த விருந்தாளியின் தேவை அறிந்து உபசரிப்பது தமிழரின் பண்பாடு .என்று சொல்லிதிருநீர் கொடுத்தார் தந்தை பெரியார் .

தந்தை பெரியாரிடம் ஒருவர் கேள்விக் கேட்டார் .கடவுள் இல்லை இல்லவே இல்லை என்கிறீர்கள் .உங்கள் முன் கடவுள் தோன்றினால்  என்ன ? செய்வீர்கள். என்றார் .ஒரு ஆன்மிகவாதியிடம் நீங்கள் கடவுள் உண்டு என்கிறீர்கள் .நான்  கடவுள் இல்லை என்கிறேன் என்று   ஒருவர் சொன்னால் உடன் கோபப்பட்டு விடுவார்கள் .ஆனால்   தந்தை பெரியார்  கோபப்படாமல் சொன்னார் .கடவுளை வரச் சொல்லுங்கள் வந்தால்   கடவுள் உண்டு உண்டவே உண்டு என்று சொல்லி விடுகிறேன் என்றார் .
தந்தை பெரியார் மகாபாரத கண்ணன் பற்றி கேலியாக் சொல்வார் .கண்ணன் குழந்தையாக இருந்தபோது வெண்ணை திருடியபோதே கண்டித்து இருந்தால் பெரியவன் ஆகி சேலை திருடி இருக்க மாட்டான் என்பார் .


உலக ஆயுத வியாபாரி அமெரிக்கா ஆயுத  பூசை நடத்துவது இல்லை .

  ஆயுத  பூசை
ஆயுத சுத்தம் சரி
மனசு ?

கடவுள் இல்லை என்பவர்கள் எந்த ஆலயத்தையும் இடித்தது இல்லை .கடவுள் உண்டு என்பவர்கள்தான் பிற மதத்தவரின் வழிப்பாட்டுத் தலத்தை இடிக்கின்றனர் .உலகம் முழுவதும் மதத்தின் காரணமாகவே சண்டைகள் .உலக அமைதியை மதத்தின் பெயரால் கெடுப்பவர்கள் திருந்த வேண்டும் .பகுத்தறிவைப் பயன் படுத்த வேண்டும் .பகுத்தறிவைப் பயன் படுத்துபவன்தான் மனிதன்   மத வெறி மாய்ப்போம் ,மனித நேயம் காப்போம்.    


  தந்தை பெரியார்  பொன்மொழி

பக்தி வந்தால் புத்தி போகும்
புத்தி வந்தால் பக்தி போகும்

பக்தி என்பது தனிச் சொத்து
ஒழுக்கம் என்பது பொதுச் சொத்து
--
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%88._%E0%AE%B5%E0%AF%86._%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF

கருத்துகள்