ஹைக்கூ கவிஞர் இரா .இரவி


ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

மூளைச்சலவையால்
மூளை இழந்தவர்கள்
தீவிரவாதிகள்

விலங்குகளை விடக்
கீழானவர்கள்
தீவிரவாதிகள்

உயிர்களை அழிக்கும்
கொடூரன்களே
உருவாக்க முடியுமா ?

மதி இழந்ததால்
மதச் சார்பற்ற நாட்டில்
மதக்கொலைகள்

அறிவிழந்த
மத வெறியால்
அப்பாவி மக்கள் பலி

வாழ்ந்தவர்களை விட
வீழ்ந்தவர்களே அதிகம்
மதத்தால்

மதம் அபீன் என்றார் லெனின்
மதம் புரட்டு என்றார் பெரியார்
மெய்யானது இன்று

--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!

கருத்துகள்