மனதில் ஹைக்கூ

நூல் அறிமுகம்

நவம்பர் 01-15_2010

நூல் : மனதில் ஹைக்கூ

ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி

வெளியீடு : ஜெயசித்ரா


வடக்கு மாசி வீதி, மதுரை - 625 001.

பக்கங்கள் : 64 விலை: ரூ 40

நடைமுறை வாழ்க்கையில் காணுகின்ற காட்சிகளைக் கருத்தோவியமாய் - ஹைக்கூவாய் ஒளிரச் செய்துள்ளார் கவிஞர். சூழல், சமுதாயச் சிந்தனை, நிருவாகக் கோளாறு.... என்று வாழ்க்கை யின் ஒவ்வொரு அங்கமும் அலசி ஆராயப் பட்டுள்ளது.

விளைவித்தன கேடு/

கண்களுக்கும் மனதிற்கும்/

தொ(ல்)லைக்காட்சிகள்


யாரும் பார்க்கவில்லை கடவுளை /

எல்லோரும் பார்க்கின்ற சாத்தான்/

தொ(ல்) லைக்காட்சி

என்று சிறுவர் முதல் பெரியவர்வரை அனைவரையும் அடக்கி ஆட்டி வைத்துக் கொண்டிருக்கும் தொலைக்காட்சிபற்றிய வரிகள் மக்களைச் சிந்திக்க வைப்பன.

ஜோதிடம் என்ற போர்வை மக்களை மூடநம்பிக்கையினுள் மூழ்கடித்திருப்பதை,

எதிர்காலம் அறிவதாக /

நிகழ்காலம் வீணடிப்பு/

சோதிடம்,


மடக்கட்டங்கள் கணித்து/

மனக்கட்டடங்கள்தகர்ப்பு/

சோதிடம்


என்று குமுறியுள்ளார் கவிஞர்.


படிக்காவிட்டாலும்/

பாடமாகுங்கள் மருத்துவ மனைக்கு/

உடல்தானம்


விழி இழந்தவருக்கு /

விழி ஆகுங்கள் /

ஒளி ஏற்றுங்கள்


என்று சமுதாய விழிப்புணர்வுக்கு வித்திட்டுள்ளார்.

பரபரப்பான உலகில் பெற்றோரின் மீது பிள்ளைகள் காட்டும் வெறுப்பினை,

குஞ்சுகள் மிதித்து/

கோழிகள் காயம்/

முதியோர் இல்லம்

என்ற புதுமொழி படைத்து துணுக்குற வைத்துள்ளார்.

மொத்தத்தில், மனதின் உள்ளக் குமுறல்களை மூன்றே வரிகளில் முத்தாய்ப்பாய் முத்திரை பதித்து படிப்போர் மனதினைத் தென்றலாகத் தீண்டி மகிழ்ச்சியுற வைப்பதே மனதில் ஹைக்கூ.


--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
eraeravi.wordpress.com
eraeravi.blogspot.com

http://eluthu.com/user/index.php?user=eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

ண் தானம் செய்வோம் !!!!!

கருத்துகள்