ஹைக்கூ கவிஞர் இரா .இரவி


ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

பூகம்பம் வரும் முன்
அறியும் தவளை
மனிதன் ?

சேமிக்கும் எறும்பு
மழைக் காலத்திற்கு
மனிதன் ?

நன்றி மறக்காது
வாலாட்டும் நாய்
மனிதன் ?

பசிக்காமல் உண்பதில்லை
விலங்குகள்
மனிதன் ?

பிறந்ததும் உடன்
நீந்திடும் மீன்
மனிதன் ?

அடைகாக்கும் காகம்
குயிலின் முட்டையையும்
மனிதன் ?

காடுகள் வளரக்
காரணம் பறவைகள்
மனிதன் ?

சீண்டாமல் எவரையும்
கொத்தாது பாம்பு
மனிதன் ?

ஓடிடச் சலிப்பதில்லை
மான்
மனிதன் ?

அசைவம் உண்ணாது
அசைவம் ஆகின்றது
ஆடு

கொள்ளையர்களின்
கூடாரமானது
கல்வி நிறுவனங்கள்




--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
eraeravi.wordpress.com
eraeravi.blogspot.com

http://eluthu.com/user/index.php?user=eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

ண் தானம் செய்வோம் !!!!!

கருத்துகள்