கவிஞர் பார்வையில் ஆசிரியர்

http://thesamnet.co.uk/wp-content/uploads/2009/09/radhakir.jpg
கவிஞர் பார்வையில் ஆசிரியர்

மாதா பிதா குரு தெய்வம் என்றார்கள்
தெய்வத்திற்கும் மேலாக குருவை வைத்தார்கள்
இரண்டாம் பெற்றோர்கள் நம் ஆசிரியர்கள்
இருள் நீக்கிடும் ஒளிவிளக்கு ஆசிரியர்கள்
புயலைத் தென்றலாக்கும் வித்தை கற்றவர்கள் ஆசிரியர்கள்
புரியாததைப் புரிய வைக்கும் புனிதர்கள் ஆசிரியர்கள்
கற்களை சிலைகளாக செதுக்குவது ஆசிரியர்கள்
களிமண்களை பொம்மைகளாக வடிப்பது ஆசிரியர்கள்
முட்டாள்களையும் அறிவாளிகள் ஆக்குவது ஆசிரியர்கள்
முன்மாதிரியாக வாழ்ந்து காட்டுபவர்கள் ஆசிரியர்கள்
மாணவர்களை குழந்தைகளாக நினைப்பது ஆசிரியர்கள்
மாணவர்களை மாவீரர்களாக மாற்றுவது ஆசிரியர்கள்
மாணவர்களுக்கு தன்னம்பிக்கை விதைப்பது ஆசிரியர்கள்
மாணவர்களுக்கு எழுச்சியை ஊட்டுவது ஆசிரியர்கள்
ஆயிரம் விளக்குகளை ஏற்றும் அகல்விளக்கு ஆசிரியர்கள்
அறிவொளி ஏற்றிடும் அற்புத ஒளி ஆசிரியர்கள்
இந்தியாவே போற்றும் நல்மனிதர் அப்துல்கலாம்
இனியவர் அவர் போற்றுவது ஆசிரியர்கள்
பணிவுகள் பயிற்றுவிப்பது ஆசிரியர்பணி
பணிகளில் சிறந்த பணி ஆசிரியப் பணி

கருத்துகள்