வைரமுத்து திரைப்படப் பாடல்களில் பொதுவுடைமைத் தாக்கம் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
நூல் ஆசிரியர் கவிஞர் இதயகீதன்
இந்த நூலின் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு செய்துள்ளார். முன்னோட்டமாக இந்நூல் வந்துள்ளது.பட்டதாரி தமிழாசிரியராகவும்,விடுதி காப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார். ஓய்வறியா உழைப்பாளி இவரது ஆய்வுக்கு நெறியாளர் தமிழ்த்தேனீ இரா.மோகன். தனது குருவின் மணிவிழாவில் இந்த நூலை வெளியிட்டு சிறப்பித்துள்ளார். நூலாசிரியர் இதயகீதன். பழகுவதற்கு இனிமையானவர். நல்லவர், வல்லவர்,புன்னகை மன்னர்.
நூலின் முகப்பு அட்டையில் கவிஞர் வைரமுத்து நூலாசிரியர் இதயகீதன் இருவரின் புகைப்படம் அலங்கரிக்கின்றது. பொதுவுடமை என்பது மனிதநேயம். மனிதநேயப் பற்றாளர்கள் அனைவரும் விரும்புவது பொதுவுடமை. பொதுவாக இன்றைக்கு திரைப்படப் பாடல்கள். தரம் தாழ்ந்து விட்டது என்பது உண்மையே. நூலாசிரியர் கவிஞர் வைரமுத்துவின் சற்று முந்தைய பாடல்களையே ஆய்வுக்கு எடுத்து உள்ளார். இன்றைய பாடல்களில் கருத்துக்கு இடம் எது? இசை இரைச்சலில் பாடல் வரிகளே எதுவும் புரியவில்லை. கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு பொதுவுடைமைக் கருத்தில் ஈடுபாடு இருந்தாலும் தற்போது திருமண மண்டபம் அதிபதி,முதல்வரின் நெருக்கமான நண்பர் என முதலாளித்துவ பாணியில் வலம் வருவது யாவரும் அறிந்ததே. இருந்தாலும், அன்று எழுதிய பாடல்களின் வரிகளில் பொதுவுடைமைத் தாக்கம் இருந்தது உண்மை.
மேடைக் கலைவாணர் நன்மாறன்,பேராசிரியர் ச.மாடசாமி, தமிழ்த்தேனீ இரா.மோகன் ஆகியோரின் அணிந்துரை நூலிற்கு அணி சேர்க்கின்றன. கவிஞர் வைரமுத்து டிசம்பர் 2009 வரை 7000 திரைப்படப் பாடல்கள் எழுதி உள்ளார்.நூலாசிரியர் தன் ஆய்வுக்கு 906, பாடல்களை தேர்வு செய்து ஆய்ந்துள்ளார். கவிஞர் வைரமுத்து அவர்களுக்கே அவர் எழுதிய திரைப்படப் பாடல்களில் உடன்பாடு இல்லை என்பதை அவரது மொழியிலேயே சொல்ல வேண்டுமானால்,”திரைப்படத்தைத் தீக்குச்சிக்குத் தின்னக் கொடுப்போம்” என்று இன்னொரு தேசிய கீதத்தில் எழுதி உள்ளார். அவர் அன்று எழுதியது இன்று பொருந்துவதாகவே உள்ளது. அவரது பாடல்களில் அத்திப் பூத்தாற் போல கதைக்காக வந்த பாடல்களில் பொதுவுடைமை சிந்தனைகளை பூதக் கண்ணாடி போட்டு ஆய்வு செய்து இந்நூல் படைத்துள்ளார். பாராட்டுக்கள்.
சங்க காலம் முதல் சித்தர்கள் காலம் வரை வர்க்கப் போராட்டம் இருந்தது என தொல்காப்பியம்,புறநானூறு பாடல்,திருக்குறள் என யாவும் மேற்கோள் காட்டி உள்ளார்.
ஈ என இரத்தல் இழிந்தன்று அதன்எதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று – புறநானூற்றுப் பாடல் 204
பகுத்துண்டு பல்உயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை – திருக்குறள் 326
தனியொரு மனிதனுக்கு உணவில்லை யெனில்
ஜெகத்தினை அழித்திடுவோம் -மகாகவி பாரதியார்
பொதுவுடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
புனிதமோடதை எங்கள் உயிரென்று காப்போம் – புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
வசதி படைத்தவன் தரமாட்டான்
வயிறு பசித்தவன் விட மாட்டான் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பொதுவுடைமை வாழும் நாட்டில்
இரண்டு வர்க்கம் என்றும் இல்லை – கவியரசு கண்ணதாசன்.
கவிஞர் வைரமுத்து பாடல்கள்
இங்கு சுதந்திரம் வந்தது யாருக்கு – அட
யாரோ பத்துப் பேருக்கு
விடுதலை வந்தும் விடியவில்லை – அட
இருளின் சுவர்கள் இடியவில்லை (இது எங்க நாடு)
(உண்மை தான்.)
கோவணம் இல்லாத தேசத்தில்
இன்றைக்கு எத்தனை கட்சிக்கொடி
கண்ணைப் பறிக்கிறதே
விண்ணை மறைக்கிறதே ( புதிய தீர்ப்பு)
( நாளும் ஒரு புதுக்கட்சி உருவாகிக் கொண்டு தான் இருக்கின்றது)
ஓட்டுப் போடும் காலம்
ஊரில் மேளதாளம்
வெள்ளை வேட்டி கூட்டம் வந்து
வேஷம் கட்டி ஆடும்
ஓட்டுப் போட்டு ஓட்டு போட்டுத்
தாண்டவக் கோனே – பல பேர்
ஓட்டையைத் தான் போட்டாண்டா
தாண்டவக் கோனே(துளசி)
( இன்றும் அரசியல்வாதிகளின் ஏமாற்று வேலை தொடர்கின்றது)
என்ன தேசமோ – இது
என்ன தேசமோ?
இங்கு பொய்கள் கூடியே
ஒரு நியாயம் பேசுமோ( உன் கண்ணில் நீர் வழிந்தால்)
இந்தத் தலைமுறையே
லஞ்சப் பரம்பரையே (புதிய தீர்ப்பு)
(பரம்பரையாகவே இலஞ்சமும் தொடர்கின்றது)
(மூட நம்பிக்கைகளையும் சாடுகின்றார்)
கை சேர்ந்த காசையெல்லாம்
நீ கற்பூரம் காட்டிப்புட்ட ( நட்பு)
வந்தது எல்லாம் விதிப்படி என்றால்
வாழ்வது எல்லாம் வீண் தானே (வில்லாதி வில்லன்)
ஜாதகத்தைப் பார்த்துப் பார்த்துச் சாய்ந்து விடாதே (வசந்தி 1988)
புரட்சிகள் ஏதும் செய்யாமல்
பெண்ணுக்கு நன்மை விளையாது ( காதலன்)
(பெண் விடுதலையும் பாடி உள்ளார்)
நூல் ஆசிரியர் கவிஞர் இதயகீதன்,கவிஞர் வைரமுத்து பல்வேறு நூல்களில் இருந்து குறிப்புகளில் இருந்து ஆய்வு செய்து, அதிக நாட்கள் ஓடாத,பிரபலமாகாத திரைப்படங்களில் இருந்து தேடிப் பிடித்து பொதுவுடைமைத் தாக்கம் எதில் உள்ளது என சல்லடை போட்டுத் தேடி,நூலை வடித்துள்ளார்.நூலாசிரியரின் உழைப்பு பாராட்டுக்குரியதே.
எழுத்திற்கும், செயலுக்கும் வேற்றுமை இருக்கக் கூடாது, அது தான் ஒரு கவிஞனுக்கு இலக்கணம், மகாகவி பாரதியும்,புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும் எழுதியபடி வாழ்ந்தவர்கள்.ஆனால் இன்றைக்கு நாட்டு நடப்பு எப்படி உள்ளது. பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகின்றனர். ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகின்றனர். தினந்தோறும் செய்தித்தாள்களில் பட்டினிச் சாவுகளும், வறுமையின் காரணமாக தற்கொலைகளும் நடைபெற்று வருகின்றது. இதற்கு உலகமயத்தை வரவேற்ற ஆள்வோரும் காரணமாகின்றனர். ஆள்வோரிடம் பொதுவுடைமை கருத்தை வலியுறுத்த கவிஞர் வைரமுத்து முன் வர வேண்டும். அப்போது நூலாசிரியர் கவிஞர் இதயகீதன் உழைப்பிற்கு பெருமை சேர்த்ததாக அமையும். போதுவுடைமை எழுத்தில் மட்டும் இருந்தால் போதாது. செயலிலும் வர வேண்டும்.
நூல் ஆசிரியர் கவிஞர் இதயகீதன்
இந்த நூலின் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு செய்துள்ளார். முன்னோட்டமாக இந்நூல் வந்துள்ளது.பட்டதாரி தமிழாசிரியராகவும்,விடுதி காப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார். ஓய்வறியா உழைப்பாளி இவரது ஆய்வுக்கு நெறியாளர் தமிழ்த்தேனீ இரா.மோகன். தனது குருவின் மணிவிழாவில் இந்த நூலை வெளியிட்டு சிறப்பித்துள்ளார். நூலாசிரியர் இதயகீதன். பழகுவதற்கு இனிமையானவர். நல்லவர், வல்லவர்,புன்னகை மன்னர்.
நூலின் முகப்பு அட்டையில் கவிஞர் வைரமுத்து நூலாசிரியர் இதயகீதன் இருவரின் புகைப்படம் அலங்கரிக்கின்றது. பொதுவுடமை என்பது மனிதநேயம். மனிதநேயப் பற்றாளர்கள் அனைவரும் விரும்புவது பொதுவுடமை. பொதுவாக இன்றைக்கு திரைப்படப் பாடல்கள். தரம் தாழ்ந்து விட்டது என்பது உண்மையே. நூலாசிரியர் கவிஞர் வைரமுத்துவின் சற்று முந்தைய பாடல்களையே ஆய்வுக்கு எடுத்து உள்ளார். இன்றைய பாடல்களில் கருத்துக்கு இடம் எது? இசை இரைச்சலில் பாடல் வரிகளே எதுவும் புரியவில்லை. கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு பொதுவுடைமைக் கருத்தில் ஈடுபாடு இருந்தாலும் தற்போது திருமண மண்டபம் அதிபதி,முதல்வரின் நெருக்கமான நண்பர் என முதலாளித்துவ பாணியில் வலம் வருவது யாவரும் அறிந்ததே. இருந்தாலும், அன்று எழுதிய பாடல்களின் வரிகளில் பொதுவுடைமைத் தாக்கம் இருந்தது உண்மை.
மேடைக் கலைவாணர் நன்மாறன்,பேராசிரியர் ச.மாடசாமி, தமிழ்த்தேனீ இரா.மோகன் ஆகியோரின் அணிந்துரை நூலிற்கு அணி சேர்க்கின்றன. கவிஞர் வைரமுத்து டிசம்பர் 2009 வரை 7000 திரைப்படப் பாடல்கள் எழுதி உள்ளார்.நூலாசிரியர் தன் ஆய்வுக்கு 906, பாடல்களை தேர்வு செய்து ஆய்ந்துள்ளார். கவிஞர் வைரமுத்து அவர்களுக்கே அவர் எழுதிய திரைப்படப் பாடல்களில் உடன்பாடு இல்லை என்பதை அவரது மொழியிலேயே சொல்ல வேண்டுமானால்,”திரைப்படத்தைத் தீக்குச்சிக்குத் தின்னக் கொடுப்போம்” என்று இன்னொரு தேசிய கீதத்தில் எழுதி உள்ளார். அவர் அன்று எழுதியது இன்று பொருந்துவதாகவே உள்ளது. அவரது பாடல்களில் அத்திப் பூத்தாற் போல கதைக்காக வந்த பாடல்களில் பொதுவுடைமை சிந்தனைகளை பூதக் கண்ணாடி போட்டு ஆய்வு செய்து இந்நூல் படைத்துள்ளார். பாராட்டுக்கள்.
சங்க காலம் முதல் சித்தர்கள் காலம் வரை வர்க்கப் போராட்டம் இருந்தது என தொல்காப்பியம்,புறநானூறு பாடல்,திருக்குறள் என யாவும் மேற்கோள் காட்டி உள்ளார்.
ஈ என இரத்தல் இழிந்தன்று அதன்எதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று – புறநானூற்றுப் பாடல் 204
பகுத்துண்டு பல்உயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை – திருக்குறள் 326
தனியொரு மனிதனுக்கு உணவில்லை யெனில்
ஜெகத்தினை அழித்திடுவோம் -மகாகவி பாரதியார்
பொதுவுடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
புனிதமோடதை எங்கள் உயிரென்று காப்போம் – புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
வசதி படைத்தவன் தரமாட்டான்
வயிறு பசித்தவன் விட மாட்டான் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பொதுவுடைமை வாழும் நாட்டில்
இரண்டு வர்க்கம் என்றும் இல்லை – கவியரசு கண்ணதாசன்.
கவிஞர் வைரமுத்து பாடல்கள்
இங்கு சுதந்திரம் வந்தது யாருக்கு – அட
யாரோ பத்துப் பேருக்கு
விடுதலை வந்தும் விடியவில்லை – அட
இருளின் சுவர்கள் இடியவில்லை (இது எங்க நாடு)
(உண்மை தான்.)
கோவணம் இல்லாத தேசத்தில்
இன்றைக்கு எத்தனை கட்சிக்கொடி
கண்ணைப் பறிக்கிறதே
விண்ணை மறைக்கிறதே ( புதிய தீர்ப்பு)
( நாளும் ஒரு புதுக்கட்சி உருவாகிக் கொண்டு தான் இருக்கின்றது)
ஓட்டுப் போடும் காலம்
ஊரில் மேளதாளம்
வெள்ளை வேட்டி கூட்டம் வந்து
வேஷம் கட்டி ஆடும்
ஓட்டுப் போட்டு ஓட்டு போட்டுத்
தாண்டவக் கோனே – பல பேர்
ஓட்டையைத் தான் போட்டாண்டா
தாண்டவக் கோனே(துளசி)
( இன்றும் அரசியல்வாதிகளின் ஏமாற்று வேலை தொடர்கின்றது)
என்ன தேசமோ – இது
என்ன தேசமோ?
இங்கு பொய்கள் கூடியே
ஒரு நியாயம் பேசுமோ( உன் கண்ணில் நீர் வழிந்தால்)
இந்தத் தலைமுறையே
லஞ்சப் பரம்பரையே (புதிய தீர்ப்பு)
(பரம்பரையாகவே இலஞ்சமும் தொடர்கின்றது)
(மூட நம்பிக்கைகளையும் சாடுகின்றார்)
கை சேர்ந்த காசையெல்லாம்
நீ கற்பூரம் காட்டிப்புட்ட ( நட்பு)
வந்தது எல்லாம் விதிப்படி என்றால்
வாழ்வது எல்லாம் வீண் தானே (வில்லாதி வில்லன்)
ஜாதகத்தைப் பார்த்துப் பார்த்துச் சாய்ந்து விடாதே (வசந்தி 1988)
புரட்சிகள் ஏதும் செய்யாமல்
பெண்ணுக்கு நன்மை விளையாது ( காதலன்)
(பெண் விடுதலையும் பாடி உள்ளார்)
நூல் ஆசிரியர் கவிஞர் இதயகீதன்,கவிஞர் வைரமுத்து பல்வேறு நூல்களில் இருந்து குறிப்புகளில் இருந்து ஆய்வு செய்து, அதிக நாட்கள் ஓடாத,பிரபலமாகாத திரைப்படங்களில் இருந்து தேடிப் பிடித்து பொதுவுடைமைத் தாக்கம் எதில் உள்ளது என சல்லடை போட்டுத் தேடி,நூலை வடித்துள்ளார்.நூலாசிரியரின் உழைப்பு பாராட்டுக்குரியதே.
எழுத்திற்கும், செயலுக்கும் வேற்றுமை இருக்கக் கூடாது, அது தான் ஒரு கவிஞனுக்கு இலக்கணம், மகாகவி பாரதியும்,புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும் எழுதியபடி வாழ்ந்தவர்கள்.ஆனால் இன்றைக்கு நாட்டு நடப்பு எப்படி உள்ளது. பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகின்றனர். ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகின்றனர். தினந்தோறும் செய்தித்தாள்களில் பட்டினிச் சாவுகளும், வறுமையின் காரணமாக தற்கொலைகளும் நடைபெற்று வருகின்றது. இதற்கு உலகமயத்தை வரவேற்ற ஆள்வோரும் காரணமாகின்றனர். ஆள்வோரிடம் பொதுவுடைமை கருத்தை வலியுறுத்த கவிஞர் வைரமுத்து முன் வர வேண்டும். அப்போது நூலாசிரியர் கவிஞர் இதயகீதன் உழைப்பிற்கு பெருமை சேர்த்ததாக அமையும். போதுவுடைமை எழுத்தில் மட்டும் இருந்தால் போதாது. செயலிலும் வர வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக