வருத்தம்தான் இரா.இரவி

நடப்பு கவிதை

வருத்தம்தான் இரா.இரவி



தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
என்ற நாமக்கல் கவியின்
வைர வரிகளுக்கு பொருத்தமாக
தமிழனின் பெருமையை
உலகிற்கு பறைசாற்றியவர்

பேசும் போதெல்லாம்
உலகப் பொதுமறையை உச்சரிப்பவர்
உச்சரிப்பது மட்டுமன்றி
வள்ளுவம் வழி வாழ்பவர்

தமிழன் என்பதற்காக
அழைக்கா விட்டாலும்
இந்தியாவின் முன்னாள்
முதற்க் குடிமகன் என்பதற்காகவாவது
செம்மொழி மாநாட்டிற்கு அழைத்து
இருக்க வேண்டும்

கருத்துகள்