தமிழ் இலக்கியத்தின் மணிமகுடம் திருக்குறள்
இரா. இரவி

தமிழ் இலக்கியத்தின்
மணிமகுடம் திருக்குறள்
தனிப்பெரும் இடம்பெற்ற
இலக்கியம் திருக்குறள்
தமிழ் என்ற சொல்லே
இடம் பெறாத திருக்குறள்
தமிழன் என்ற சொல்லே
இடம் பெறாத திருக்குறள்
கடவுள் என்ற சொல்லே
இடம் பெறாத திருக்குறள்
கற்கண்டை மிஞ்சும்
கனிச்சுவை மிக்க திருக்குறள்
வாழ்வியல் நெறியை
பயிற்றுவிக்கும் திருக்குறள்
வாழ்வின் அர்த்தம்
உணர்த்தும் திருக்குறள்
உலக இலக்கியங்களின்
உன்னதம் திருக்குறள்
உலகிற்கு அறநெறி
அறிவிக்கும் திருக்குறள்
உலக மொழிகளில்
மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள்
உலக மக்கள் யாவரும்
அறிந்த திருக்குறள்
அழியாப் பெருமையுடன்
நிலைத்திருக்கும் திருக்குறள்
அறியாமை நீக்கிடும்
அறிவுடைமை திருக்குறள்
மனிதநேயம் மனத்தில்
விதைக்கும் திருக்குறள்
மடமை நீக்கி பகுத்தறிவைப்
போதிக்கும் திருக்குறள்
ஈடு இணையற்ற
இனிய இலக்கியம் திருக்குறள்
எண்ணிலடங்கா கருத்துப்
புதையல் திருக்குறள்
காந்தியடிகளின் குரு
டால்ஸ்டாய் என்ற அறிஞர்
டால்ஸ்டாயின் குரு
செந்நாப்புலவர் திருக்குறள்
சொக்க வைக்கும்
சொற்களின் சுரங்கம் திருக்குறள்
சோகத்தை மறக்க வைக்கும்
சுகம் திருக்குறள்
தமிழுக்கும் செம்மொழி
பெற்றுத் தந்த திருக்குறள்
தமிழருக்குப் பெருமை
ஈட்டித் தந்த திருக்குறள்
கருத்துகள்
கருத்துரையிடுக