என்னவள் ! கவிஞர் இரா .இரவி

என்னவள் ! கவிஞர் இரா .இரவி அவளின் அளவிற்குவேறு யாருக்கும் இல்லை குரல் இனிமை ! விந்தை நீரின்றி வாழ்கின்றன மீன்கள் அவள் விழிகள் ! போட்டியிட்டுத் தோற்றது காந்த விசை அவள் விழிகளிடம் ! தேவையில்லை வண்ணம் இயற்கையில் சிவப்பு அவள் இதழ்கள் ! நடந்துவரும் நந்தவனம் சுண்டிஇழுக்கும் சோலைவனம் ! அழகிகளும் பொறாமை கொள்ளும் அழகு என்னவள் ! அழகாகின்றதுஎந்த ஆடையும் அவள் அணிந்ததும் ! வனப்பில் தோற்றது வண்ணத்துப்பூச்சி என்னவளிடம் ! அகம் வைத்ததால்அறியவில்லை அகவை அழகி அவ்வளவுதான் ! பேசாவிடினும் பார்த்தாலே போதும் அழகோ அழகு அவள் பேரழகி ! மறந்தது பசி பிறந்தது மகழ்ச்சி அவள் வருகை தெரியாது நேரம் ! ஆயிரம் பேரிலும் தெரிவாள் தனித்து ஆயிரத்தில் ஒருத்தி என்னவள் !

கருத்துகள்