என்னவள் ! கவிஞர் இரா .இரவி
அவளின் அளவிற்குவேறு யாருக்கும்
இல்லை குரல் இனிமை !
விந்தை நீரின்றி வாழ்கின்றன
மீன்கள் அவள் விழிகள் !
போட்டியிட்டுத் தோற்றது
காந்த விசை அவள் விழிகளிடம் !
தேவையில்லை வண்ணம்
இயற்கையில் சிவப்பு அவள் இதழ்கள் !
நடந்துவரும் நந்தவனம்
சுண்டிஇழுக்கும் சோலைவனம் !
அழகிகளும் பொறாமை
கொள்ளும் அழகு என்னவள் !
அழகாகின்றதுஎந்த ஆடையும்
அவள் அணிந்ததும் !
வனப்பில் தோற்றது
வண்ணத்துப்பூச்சி என்னவளிடம் !
அகம் வைத்ததால்அறியவில்லை
அகவை அழகி அவ்வளவுதான் !
பேசாவிடினும் பார்த்தாலே போதும்
அழகோ அழகு அவள் பேரழகி !
மறந்தது பசி பிறந்தது மகழ்ச்சி
அவள் வருகை தெரியாது நேரம் !
ஆயிரம் பேரிலும் தெரிவாள் தனித்து
ஆயிரத்தில் ஒருத்தி என்னவள் !
கருத்துகள்
கருத்துரையிடுக