அன்னையர் தினம் !   கவிஞர் இரா .இரவி !

அன்னையர் தினம் !   கவிஞர் இரா .இரவி ! அன்னையர் தினம் மட்டுமல்ல தினமும் ! அன்னையை நினைப்போம் போற்றுவோம் ! பத்து மாதங்கள் சுமந்துப் பெற்றவள் அன்னை ! பத்துப் போட்டு வளர்த்து எடுத்தவள் உன்னை ! 'அ ' வில் தொடங்கும் அற்புதம் அன்னை ! அம்மா அப்பா சொல்லி வளர்த்தாள் உன்னை ! உறவுகளிகளில் ஒப்பற்ற சிகரம் அன்னை ! உலகம் போற்றிட வளர்த்தாள்  உன்னை ! உலகை அறிமுகம் செய்தவள் அன்னை ! உணர்வை ஊட்டி வளர்த்தாள்  உன்னை ! வேதனை சோதனை ஏற்றாள் அன்னை ! வேண்டி விரும்பி பெற்றாள்  உன்னை ! முப்பொழுதும் போற்றும் உறவு அன்னை ! எப்பொழுதும் உயிராய் காப்பாள் உன்னை ! மாதர் குலத்தின் மாணிக்கம்  அன்னை ! மாண்பு மிக்க மனிதனாக்கினாள் உன்னை ! கருவறையில் சுமந்த கடவுள் அன்னை ! கருத்தாக வளர்த்து எடுத்தாள்   உன்னை ! பாசத்தை மழையெனப் பொழிந்தாள்  அன்னை ! பண்போடு வளர்த்து மகிழ்ந்தாள் உன்னை ! உயிர்  தந்துப் பெற்றாள்  அன்னை ! உயிராகப் போற்றி வளர்த்தாள்  உன்னை ! மனைவி வந்ததும் மறக்காதே அன்னை ! மடியில் வைத்து வளர்த்தாள்  உன்னை ! குழந்தை மறந்தாலும் மறக்காதவள் அன்னை ! குழந்தையை என்றுமே வெறுக்காதவள் அன்னை ! அகில உலகம் போற்றும் அன்னை ! அகல் விளக்காய்  ஒளிர்ந்தாள் அன்னை ! தன்னலம்  கருதாத உறவு அன்னை ! தன்குழந்தை நலம் கருதும் அன்னை ! அன்னையின்றி நீயுமில்லை நானுமில்லை ! அகிலம் இல்லை அன்பு இல்லை ! அன்னைக்கு இணையான உறவு உலகில் இல்லை அன்னைக்கு இணை அன்னை மட்டுமே ! . ஈடு இணையற்ற ஒரே உறவு அம்மா !        கவிஞர் இரா .இரவி ! எத்தனையோ உறவுகள் உலகில் இருந்தாலும் ஈடு இணையற்ற ஒரே உறவு அம்மா ! இந்த உலகை நமக்கு அறிமுகம் செய்த அழகு முகம் என்றும் குழந்தைக்கு மறக்காத  முகம் அம்மா ! உயிரெழுத்தில் தொடங்கி  மெய்யெழுத்தில்மையமாகி   உயிர்மெய்யில் முடியும் உன்னதம்  அம்மா ! குழந்தைக்கு உயிரும் மெய்யும் தந்த குவலயத்தில் சிறந்த  உறவு  அம்மா ! கருவிலேயே குழந்தைக்கு திரு வழங்கிய கருணைக் கடல் ஒப்பற்ற  அம்மா ! தாய்மொழியை  சேயுக்கு கருவிலேயே தன் வயிற்றிலேயே பயிற்றுவித்தவள்  அம்மா ! தன் இதயத் துடிப்பின் மூலம் கருவிலேயே குழந்தைக்கு தனது முதல் தாலாட்டைத் தொடங்கியவள் அம்மா !   குழந்தை பிறந்து பின் அழ நேர்ந்தால் மார்போடு அணைத்து தன் இதயத் துடிப்பை உணர்த்தி அழுகை நிறுத்திய அம்மா ! குருதியைப்    பாலாக்கி வழங்கி பெற்றக் குழந்தையின் உயிர் வளர்த்தவள் அம்மா ! தன் துன்பம் பொறுப்பாள் அவள் ஆனால் தன் குழந்தையின் துன்பம் பொறுக்காதவள்  அம்மா ! தன்னைத் தேய்த்து தன் குழந்தை வாழ்வை தரணியில் மணக்க வைக்கும் சந்தனம்   அம்மா ! தன்னை உருக்கி தன் குழந்தையின்  வாழ்வை தரணியில் ஒளிர வைக்கும்  மெழுகு  அம்மா ! தான் சுமந்து தன் குழந்தையை வாழ்வில் தவிக்காமல் கரை சேர்த்தத் தோணி அம்மா ! தான் உயராவிட்டாலும் தன் குழந்தையை தரணியில் உயர வைக்கும் ஏணி  அம்மா ! உலகில் யாரை  மறந்தாலும் நீங்கள் ஒருபோதும் ஒப்பற்ற அம்மாவை மறக்காதீர்கள் ! -- .

கருத்துகள்