2.5.2021 தேதியிட்ட ராணி வார இதழில் " மனத்தில் தோன்றிய வினாக்கள் !"என்ற தலைப்பில்,முனைவர். இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும் இதோ:-*
2.5.2021 தேதியிட்ட ராணி வார இதழில் " மனத்தில் தோன்றிய வினாக்கள் !"என்ற தலைப்பில்,முனைவர். இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும் இதோ:-*
* எது உண்மையான சாதனை?
சாதனை செய்ய வேண்டும் என்று வேட்கை இல்லாமல் இயல்பாக வாழ்வது நல்லது.
* சிலர் மனிதர்களைவிட விலங்குகளை அதிகம் நேசிக்கிறார்களே?
மனிதர்களையும் நேசிக்க வேண்டும்;
மனிதக் குரங்குகளையும் நேசிக்க வேண்டும்;
குரங்கு மனிதர்களையும் நேசிக்க வேண்டும்; அதுவே மனிதநேயம்.
* பெருக்கலின் மதிப்பு கூட்டலின் மதிப்பை விட அதிகமாகத்தானே வரும்?
விதிவிலக்கு உண்டு. ஒன்றை ஒன்றோடு கூட்டினால் இரண்டு; பெருக்கினால் ஒன்று மட்டுமே.
இருமை ஓர்மையாகும்போது உண்டாவதே இறைமை.
* பொதுப்புத்தி என்றால்?
மேலோட்டமான நுட்பமற்றப் புரிதல்.
* தேடுவதை நிறுத்தினால் தேடியது கிடைக்குமா?
தேடியதை விடச் சிறந்தது கிடைக்கும்.
* பரிதாபமான உண்மை எது?
வீட்டிற்கு முன்பு நெல் வயல்கள் வைத்திருப்பவர்களை விட... புல்வெளிகள் வைத்திருப்பவர்களே பணம் படைத்தவர்களாக இருக்கிறார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக